பிக் பாஸ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

ரசிகர்கள் அதிகம் விமர்சிக்கும் அனிதா, சுசித்ரா, பாலா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது.
பிக் பாஸ்: இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் போட்டியில் வெளியேற வாய்ப்புள்ளவர்களின் பட்டியலில் அனிதா சம்பத், பாலா, ஆரி ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் முதலில் நுழைந்தார்கள். பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா மற்றும் பிரபல பாடகி மற்றும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா ஆகியோர் வைல்ட் கார்ட் வழியாக புதிய போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள். 

இந்த வருட பிக் பாஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராக வெளியேறினார். இதுவரை மூன்று வாரங்கள் போட்டியாளர்கள் யாரையும் வெளியேற்றாததால் இப்போது முதல்  நாளன்று இருந்தது போலவே 16 போட்டியாளர்கள் பிக் பாஸ் இல்லத்துக்குள் உள்ளார்கள். இதனால் இந்த வருட பிக் பாஸ் திட்டமிட்டபடி 100 நாள்களுக்குள் முடியுமா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

2-வது வாரம், வெளியேற வாய்ப்புள்ளவர்களின் முதல் பட்டியலில் ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரியல்லா, ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் என ஏழு பேர் இருந்தார்கள். மிகவும் குறைந்த வாக்குகளைப் பெற்ற மூத்த நடிகை ரேகா, இந்த வருட பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். 

3-வது வாரம், வெளியேற வாய்ப்புள்ளவர்களின் 2-வது பட்டியலில் ஆஜீத், ஆரி, அனிதா சம்பத், பாலா, சுரேஷ் சக்கரவர்த்தி என ஐந்து பேர் இடம்பெற்றார்கள். இதில் மக்களின் குறைவான வாக்குகள் பாடகர் ஆஜீத்துக்குக் கிடைத்தன. எனினும் ஏற்கெனவே ஒரு போட்டியில் வென்று எவிக்சன் பாஸ் என்கிற பரிசை அவர் பெற்றிருந்ததால் அதைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொண்டார். 

4-வது வாரம் வெளியேற வாய்ப்புள்ளவர்களின் 3-வது பட்டியலில் ஆஜீத், அனிதா சம்பத், பாலா, ஜித்தன் ரமேஷ், நிஷா, ரம்யா பாண்டியன், ரியோ, சனம் ஷெட்டி, சோம், சுரேஷ் சக்கரவர்த்தி, வேல் முருகன் என 11 பேர் இடம்பெற்றார்கள். இவர்களில் வேல்முருகன் குறைவான வாக்குகளைப் பெற்று வெளியேறினார். 

5-வது வாரம் ஆரி, அனிதா, பாலா, சனம் ஷெட்டி, அர்ச்சனா, சோம், சுரேஷ் ஆகியோர் வெளியேற வாய்ப்புள்ளவர்களின் 4-வது பட்டியலில் இடம்பெற்றார்கள். இதில் சுரேஷ் வெளியேறினார். 

6-வது வாரம் தீபாவளிக்காக யாரும் வெளியேற்றப்படவில்லை.

7-வது வாரத்தில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் வெளியேற வாய்ப்புள்ளவர்களின் 5-வது பட்டியலில் ஆரி, அனிதா, பாலா, ரியோ, சம்யுக்தா, சோம், சுசித்ரா என ஏழு பேர் இடம்பெற்றார்கள். இவர்களில் ரசிகர்கள் அதிகம் விமர்சிக்கும் அனிதா, சுசித்ரா, பாலா ஆகிய மூவரில் ஒருவர் வெளியேற வாய்ப்புள்ளது. ரேகா, வேல்முருகன், சுரேஷுக்கு அடுத்தபடியாக பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பது இந்த வார இறுதியில் தெரியவரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com