சென்னை: ‘நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம்’ என்று நடிகர் விஜய் சேதுபதியின் படத்தை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.
அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேல ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே மற்றும் பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'க/பெ ரணசிங்கம்'. கரோனா ஊரடங்கின் விளைவாக திரையரங்குகள் இன்னும் திறக்கப்படாத காரணத்தால் ஜீ ப்ளக்ஸ் என்னும் ஓடிடி தளத்தில் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பலரும் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் ‘நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம்’ என்று நடிகர் சூர்யா இந்தப் படத்தினைப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் ’க/பெ. ரணசிங்கம்’. இயக்குநர் விருமாண்டி, விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், இசையமைப்பாளர் ஜிப்ரான், பவானி ஸ்ரீ, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்’ என்று பதிவிட்டுள்ளார்.