மலையாள நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறினார் நடிகை பார்வதி

மலையாள நடிகர் சங்கமான அம்மா-விலிருந்து பிரபல நடிகை பார்வதி விலகியுள்ளார். 
மலையாள நடிகர் சங்கத்திலிருந்து வெளியேறினார் நடிகை பார்வதி

மலையாள நடிகர் சங்கமான அம்மா-விலிருந்து பிரபல நடிகை பார்வதி விலகியுள்ளார். 

நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்ட 2008-ல் டிவெண்டி: 20 என்கிற படம் தயாரிக்கப்பட்டது. இதில் நடிகர்கள் மம்மூட்டி, மோகன் லால், நடிகை பாவனா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் 2-ம் பாகம் குறித்த அறிவிப்பை நடிகர் சங்கத்தின் செயலாளர் இடவேல பாபு வெளியிட்டார். முதல் பாகத்தில் நடித்த பாவனா 2-ம் பாகத்தில் நடிப்பாரா என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இறந்தவர்களை எப்படி மீட்டுக்கொண்டு வர முடியாதோ அதுபோல அம்மா அமைப்பில் உறுப்பினர்களால் உள்ளவர்கள் மட்டுமே படத்தில் நடிக்க முடியும். அவர் அம்மா அமைப்பில் உறுப்பினராக இல்லை எனப் பதில் அளித்தார். 

இடவேல பாபுவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கத்திலிருந்து பிரபல நடிகை பார்வதி விலகியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: 2018-ல் என் தோழிகள் நடிகர் சங்கத்திலிருந்து விலகியபோதும் நான் விலகவில்லை. சங்கத்தைச் சீரமைக்க சிலராவது இருக்கவேண்டும் என நினைத்தேன். ஆனால் செயலாளரின் பேட்டியைப் பார்த்த பிறகு இங்கு மாற்றம் வரும் என்கிற என் எதிர்பார்ப்பு வீணாகிவிட்டது. நடிகர் சங்கத்தால் கைவிடப்பட்ட பெண் உறுப்பினரை இறந்தவருடன் ஒப்பிடுவது மோசமானது. அருவெறுப்பானது. நடிகர் சங்கத்தில் இருப்பதால் எந்தப் பலனும் இல்லை என்பதால் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். அதே நேரம் இடவேல பாபுவும் அவருடைய பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com