விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது.
ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பங்கேற்கிறார்கள்.
இந்த வாரம் முதல் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறவுள்ளார்கள். ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரியல்லா, ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் என ஏழு பேரில் ஒருவர் வெளியேறவுள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய போட்டியாளராக பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா இல்லத்துக்குள் நுழைந்துள்ளார். இது தொடர்பான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அர்ச்சனாவின் வருகையால் பிக் பாஸ் நிகழ்ச்சி மேலும் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.