பிரபல பாடகர் குமார் சானு, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் குமார் சானு. 90களில் பாலிவுட்டின் பிரபல பாடகராக இருந்தார். 2009-ல் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் குமார் சானு பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் அவருடைய சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக குமார் சானு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நலத்திற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று தகவல் கூறப்பட்டுள்ளது.