தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை (ஏப். 6) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் ட்விட்டரில் கூறியதாவது:
நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல... ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம் என்றார்.
நேற்று வெளியிட்ட ட்வீட்டில் அவர் கூறியதாவது:
ஏப்- 1 - ஐ 6-க்கு ஒத்தி வைக்காமல் 'ஆறு’தல் பிச்சைக்கு கை நீட்டாமல் நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம், King- maker-ராக என்றார்.