2011-ல் விஷ்ணுவர்தனா என்கிற வெற்றிப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பொன் குமரன். தொடர்ந்து கன்னடப் படங்களை இயக்கியவர், ரஜினி நடித்த லிங்கா படத்தில் கதை, வசனம் எழுதினார்.
ரஜினி நடிப்பில் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து இயக்கும் படம் பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் பொன் குமரன் இயக்கத்தில் இந்திய அளவிலான ஒரு படத்தைத் தயாரிக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். பாலிவுட் தயாரிப்பாளர் ஓம் பிரகாஷ் பட்டுடன் இணைந்து 1947 என்கிற படத்தைத் தயாரிக்கவுள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்தப் படம் ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழுவினரின் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.