மகனின் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன் - வாழ்த்தும் ரசிகர்கள் (புகைப்படம்)

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் பெயரை சுட்டுரைப் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.
மகனின் பெயரை அறிவித்த சிவகார்த்திகேயன் - வாழ்த்தும் ரசிகர்கள் (புகைப்படம்)

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனின் பெயரை சுட்டுரைப் பக்கத்தின் வாயிலாக அறிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இதனை தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக அறிவித்த நடிகர் சிவகார்த்திகேயன் பல வருடங்களுக்கு பிறகு தனது தந்தையின் கை பிடித்ததாக தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் தனது மகனை முத்தமிடும் புகைப்படம் பகிர்ந்துள்ள அவர், எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் அன்போடும் ஆசியோடும் குகன் தாஸ் என பெயர் சூட்டியிருக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்ற பெண் குழந்தை உள்ளது. ஆராதனா 'கனா' படத்தில் பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com