''விலகுவதைத் தவிர வேறு வழியில்லை'' : விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து நடிகை சொன்ன காரணம்

விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் பங்கேற்காததன் காரணத்தை நடிகை சோஃபியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
''விலகுவதைத் தவிர வேறு வழியில்லை'' : விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்காதது குறித்து நடிகை சொன்ன காரணம்

விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் பங்கேற்காததன் காரணத்தை நடிகை சோஃபியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'குக் வித் கோமாளி', 'மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை', 'பிக்பாஸ்' என விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். 

அந்த வகையில் திருமணமான தம்பதிகள் பங்கேற்கும் 'மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சி மிகப் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் தம்பதிகள் ஒருவரையொருவர் எவ்வாறு புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள சில விளையாட்டுக்களில் பங்கேற்க வேண்டும். அப்படி தம்பதிகள் பங்கேற்கும் விளையாட்டுகள் பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை வழங்குகின்றன.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் மணிகண்டன் - சோஃபியா தம்பதியினர். இந்த நிலையில் நடிகை சோஃபியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு உடல் நிலை சரியில்லை. மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லியிருக்கிறார்கள். அதனால் நிகழ்ச்சியை விட்டு விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. வைல்டு கார்டு மூலம் மீண்டும் நிகழ்ச்சிக்கு வருவேன்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com