தமிழின் முன்னணி இயக்குநர்கள் பலரும் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தங்களுடைய படங்களையும் புதுமுக இயக்குநர்களின் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குநர் ஷங்கரின் 'எஸ் பிக்சர்ஸ்' மணிரத்னத்தின் 'மெட்ராஸ் டாக்கீஸ் ' போன்ற நிறுவனங்கள் பல நல்ல படங்களை தயாரித்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தமிழின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம் , ஷங்கர் ,ஏ.ஆர் முருகதாஸ் , கெளதம் மேனன் , வெற்றிமாறன் , மிஷ்கின் , லிங்குசாமி , வசந்தபாலன் , லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார்கள்.
'ரெயின் ஆன் பிலிம்ஸ்' என்கிற பெயரில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் முதல் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
மேலும் குறும்படங்கள் , இணையத் தொடர்களையும் இந்த தாயரிப்பு நிறுவனம் தயாரிக்கும் என தெரிவித்திருக்கிறார்கள்.