
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாக அதாவது அருள்மொழி வர்மனாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தையடுத்து ஜெயம் ரவி நடிக்கும் படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜிஷின் கடந்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே அதற்கு காரணம்.
இதையும் படிக்க | 'கள்ளன்' பட தலைப்பை மாற்ற இயக்குநருக்கு மிரட்டல்
ஆனாலும் சில இயக்குநர்கள் தோல்விகளுக்கு பிறகும் மிகப் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறார்கள். இயக்குநர் ராஜேஷ் அந்த வரிசையில் நிச்சயம் இடம் பிடிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.