ஆட்டு இறைச்சிக் கடை ஒன்று தன் பெயரில் செயல்படுவது பற்றி ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் சோனு சூட்.
கரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார். இதுபோன்ற உதவிகளினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை சோனு சூட் பெற்றார். இந்தியாவில் நிலவும் கரோனா 2-வது அலையிலும் பலருக்கும் உதவி செய்து வருகிறார் சோனு சூட்.
இந்நிலையில் சோனு சூட் செய்து வரும் நல்ல காரியங்களால் மனம் நெகிழ்ந்த அவருடைய ரசிகர் ஒருவர், தெலங்கானாவில் சோனு சூட் பெயரில் ஆட்டு இறைச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதுபற்றிய செய்திக்கு சோனு சூட் கூறியதாவது:
சைவ உணவுப் பழக்கம் உள்ளவன் நான். ஆட்டு இறைச்சிக் கடைக்கு என் பெயரா? சைவ உணவு தொடர்பான கடை திறப்பதற்கு நான் உதவமுடியுமா என்று கேட்டுள்ளார்.