நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பிச்சைக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இதையும் படிக்க | ‘தலிபான்களைக் கொண்டாடுவது ஆபத்தானது’: நடிகர் நசிருதீன் ஷா
இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த விஜய் ஆண்டனி நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் 'பிச்சைக்காரன்' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமைந்தது . பின் அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டதுடன் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
முன்னதாக இப்படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய அறிவிப்பும் , முதல் பார்வையும் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் பூஜையை நேற்று (செப்-1) சென்னையில் வைத்ததோடு படப்பிடிப்பையும் ஆரம்பித்தனர்.
பிச்சைக்காரன்-2 படத்தை விஜய் ஆண்டனி தயாரிப்பதோடு அவரே எழுதி இயக்குகிறார்.