''கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை'': சூர்யா - ஜி.வி.பிரகாஷின் பாடலுக்கு அமிதாப் பச்சன் புகழாராம்

ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவின் சூரரைப்போற்று பாடலுக்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார்.  
''கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை'': சூர்யா - ஜி.வி.பிரகாஷின் பாடலுக்கு அமிதாப் பச்சன் புகழாராம்


ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவின் சூரரைப்போற்று பாடலுக்கு ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான படம் 'சூரரைப் போற்று'. குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் சூரரைப் போற்று இடம் பெற்ற கையிலே ஆகாசம் பாடலுக்கு புகழாரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு முறையும் எனக்கு கண்ணீர் அருவி மாதிரி வழிந்தது. தமிழில் சூர்யா படத்தில் ஒரு பாடல். 

சூர்யா தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார். படத்தோடு பார்க்கும்போது அந்த தருணம் மிகவும் கடினமானது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்த பாடல் மிக அழகானது. இதயத்தை தொடுகிறது. இதோடு நான் முடித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எழுதினால் எனக்கு கண்ணீர் வரும். என்று எழுதியுள்ளார். மேலும் பாடல் வரிகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து பகிர்ந்துள்ளார். 

இதனைப் பகிர்ந்துகொண்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நன்றி சார். நமக்கு யார் உத்வேகமாக அளிக்கிறார்களோ, அவர்களே நம் பாடலைப் பற்றி குறிப்பிடும்பொழுது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com