தனது 'அங்காடித் தெரு' திரைப்படக் கனவு நிறைவேறியதாக இயக்குநர் வசந்த பாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் 'அங்காடித் தெரு'. சென்னையில் ஆடை விற்பனைக் கடை ஒன்றில் பணிபுரியும் பணியாளர்கள் அனுபவிக்கும் துயரத்தை மிக தத்ரூபமாக பதிவு செய்திருந்தது இந்தப் படம்.
இந்த நிலையில் கடைகளில் நின்று பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கைகள் வழங்குவதற்கான சட்டத் திருத்தம் செய்ய முடிவு செய்து, சட்ட முன்வடிவை சட்டப்பேரவையில் அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன் தனது முகநூல் பக்கத்தில், ''தமிழக அரசுக்கு நன்றி. என் 'அங்காடித் தெரு' திரைப்படத்தின் கனவு மெல்ல, மெல்ல நிறைவேறுகிறது. 'அங்காடித் தெரு' திரைப்படத்தில் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வதால் கால்களில் வெரிக்கோஸ் நோய் பற்றிக் கூறியிருப்பேன். உங்களுக்கு நினைவிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.