நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் சல்மான் கானுக்கும் அவரது தந்தைக்கும் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. அதில், சித்து மூஸேவாலாவுக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திப்பீர்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே இதுதொடர்பாக பாந்திரா காவல் நிலையத்தில் சல்மான் கான் புகார் அளித்தார்.
இதையடுத்து சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்துடன் தெற்கு மும்பை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அண்மையில் சென்ற சல்மான்கான் தற்காப்பிற்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.