கரோனா பரவல் உச்சத்திலிருந்தபோது சின்னத்திரை தொடர்கள் படப்பிடிப்பு நடத்த முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டன. பின்னர் கரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் மீண்டும் படப்பிடிப்பு துவங்கி புதிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின.
அப்போது மீண்டும் மக்களை புதிய தொடர்களைப் பார்க்க வைப்பதற்கு ஒரு யுத்தியைக் கையாண்டன. அதாவது இரண்டு தொடர்களும் இணைத்து சங்கமம் என்ற பெயரில் ஒளிபரப்பினர். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்களை ரசிகர்கள் தொடர்ந்து பார்க்கவும் அது உதவியது. மேலும் புதிதாகவும் பார்வையாளர்கள் கிடைத்தனர்.
இதையும் படிக்க | 'இளையராஜாவால் ஒன்னும் பண்ண முடியாது': இயக்குநர் மிஷ்கின் அதிரடி
இந்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மாவில் பாரதியாக நடிக்கும் அருண் பிரகாஷ் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லையாக நடிக்கும் காவ்யா ஆகிய இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மூர்த்தி மற்றும் தனத்தின் மகனை பாரதி கையில் வைத்திருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மீண்டும் இரண்டு தொடர்களும் இணையப்போகிறதா அல்லது பாரதி மட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது.