மாநாடு படத்துக்கு பிறகு விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை மினி ஸ்டுடியோஸ் சார்பாக எஸ்.வினோத் குமார் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகவுள்ளது. பாட்ஷா படத்தில் ரகுவரனின் பெயர் மார்க் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | புஷ்பாவாக மாறிய ஜடேஜா
இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''கடவுளே எல்லா நல்ல கதைகளையும் என்கிட்டவே அனுப்புகிறாயே. ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தை மாநாடு 2 என சொல்லலாம். அப்படி ஒரு திரைக்கதை'' என்று குறிப்பிட்டிருந்தார்.