எதற்கும் துணிந்தவன் படத்தின் 'சும்மா சுர்ருனு' பாடல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியானது.
சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகவுள்ளது.
டி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த வரிசையில் 3-வது பாடலாக சிவகார்த்திகேயன் எழுதியுள்ள 'சும்மா சுர்ருனு' பாடல் மாலை வெளியானது.