சிவகார்த்திகேயனின் டான் படம் வருகிற பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டது. தற்போது கரோனா பரவல் காரணமாக நிறைய படங்கள் தள்ளிப்போனதால் இந்தப் படத்தின் வெளியீட்டிலும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
அடுத்ததாக சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குநர் அனு தீப் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது. ஜதி ரத்னாலு படத்தைப் போல இந்தப் படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவிருக்கிறது.
மேலும் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
நடிகை சாய் பல்லவிக்கு மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக தனுஷுடன் சாய் பல்லவி இணைந்து நடனமாடிய ரௌடி பேபி பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலமானது.
மேலும் சமீபத்தில் நானியுடன் சாய் பல்லவி இணைந்து நடித்த ஷாம் சிங்க ராய் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த காரணங்களால் சிவகார்த்திகேயன் படத்துக்கு சாய் பல்லவியை நாயகியாக தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.