இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி, நடிகர் ஜெய் இணைந்து நடித்திருக்கும் படமான ‘பட்டாம்பூச்சி’ படம் ஜூன் 24 முதல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
குஷ்பு சுந்தர் தயாரிபில் இயக்குநரும் நடிகருமான சுந்தர் சி, நடிகர் ஜெய், ஹனி ரோஸ் ஆகியோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’. பத்ரி நாராயணன் இப்படத்தினை இயக்கியுள்ளார். நவ்னீத் இசையமைத்துள்ள இப்படம் திரில்லர் வகையை சார்ந்ததாக சொல்லப்படுகிறது.
இத்திரப் படம் வரும் ஜூன் மாதம் 24 முதல் திரையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் முன்பதிவு தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.