மும்பை: 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தீபிகா படுகோன், மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
'இந்தியாவில் இருந்து முதன் முதலில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் தீபிகா படுகோன்' என்று வெளியான தகவல் சமீபத்தில் தலைப்பு செய்தியாக மாறியது.
கேன்ஸ் விழாவில் 8 பேரில் ஒரு நடுவராக பங்கேற்க செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஈரானின் திரைப்பட இயக்குனர் அஸ்ஹார் பர்ஹாடி, ஸ்வீடிஷ் நடிகை நூமி , நடிகை திரைக்கதை எழுத்தாளர் ரெபேக்கா ஹால், இத்தாலி நடிகை ஜாஸ்மின், பிரெஞ்சு இயக்குனர் லட்ஜ் லை, அமெரிக்க இயக்குனர் ஜெப் நிக்கோலஸ் மற்றும் ஜோசிம் ட்ரிர் ஆகியோர் இடம்பெறுவார்கள்.