கேஜிஎஃப் 3 படப்பிடிப்பு எப்போது? தயாரிப்பாளர் கொடுத்த தகவல்

கேஜிஎஃப் 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபருக்குப் பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேஜிஎஃப் 3-ம் பாகத்தின் படப்பிடிப்பை வரும் அக்டோபருக்குப் பிறகு தொடங்க திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கேஜிஎஃப் 2. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை உண்டாக்கிய கேஜிஎஃப் 2 மொத்தம் 1,100 கோடிக்கும் மேல் வசூலாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் முடிவில் 3-ம் பாகத்திற்கான தொடக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, கேஜிஎஃப் 3 குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தொற்றிக்கொண்டது.

இந்த நிலையில், கேஜிஎஃப் 3 குறித்து தயாரிப்பாளர் விஜய் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் தயாரிப்பாளர் பிரசாந்த் கூறியதாவது:

"பிரசாந்த் நீல் சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். 30 முதல் 35 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. அது வரும் அக்டோபர் - நவம்பரில் நிறைவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

எனவே, அக்டோபருக்குப் பிறகு கேஜிஎஃப் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளோம். இதை 2024-இல் வெளியிட திட்டமிட்டுள்ளோம்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com