புது தில்லி : ஐக்கிய அரபு அமிரகத்தில் நடக்கவிருந்த சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பினால் ஒத்திவைக்கப்படுள்ளது.
மே மாதம் 18-22 வரை நடக்கவிருந்த ஐக்கிய அரபு எமிரேடில் நடக்கவிருந்த சர்வதேச இந்திய சினிமா அகாதெமி விருது வழங்கும் விழா அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பினால் ஒத்திவைக்கப்படுள்ளது.
சர்வதேச இந்திய சினிமா அகாதெமி கூறியுருந்த செய்தியாவது : அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீது இறப்பு கவலையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும் நாட்டு மக்களுக்கும் எங்களது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தி அடைவதற்கு கடவுள் துணைப் புரியட்டும்.
அதிபர் இறப்புக்கு நாடு முழுவதும் 40 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதால் ஜுலை 14-16 இல் இவ்விழா நடக்கலாம்.