78 வயதான பின்ணனிப் பாடகர் எடவா பஷீர் காலமானார்.
ஆழப்புழாவில் சனிக்கிழமை இரவு ‘ப்ளூ டைமண்ட்’ இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது மேடையில் பாடிகொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டும் காப்பாற்ற முடியவில்லை.
இந்தச் செய்தியைக் கேட்டதும் ரசிகர்கள், “நம்ப முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர்.