நடிகர் சிம்பு அடுத்ததாக தேசிய விருது பெற்ற இயக்குநருடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இழந்த தன் மார்கெட்டை மீண்டும் சிம்பு பிடித்துள்ளார்.
இதனால், இளம் இயக்குநர்கள் முதல் பெரிய இயக்குநர்கள் வரை சிம்புவை இயக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இந்நிலையில், ‘சூரரைப் போற்று’ படத்திற்காக தேசிய விருதுபெற்ற இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சிம்பு ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்ததும் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.