திரையரங்கை நயன்தாரா வாங்கியதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள அகஸ்தியா திரையரங்கை நயன்தாரா அவரது நண்பர்களுடன் சேர்ந்து விலைக்கு வாங்கியதாகவும், அந்த இடத்தில் மேலும் 2 திரையை கட்டவுள்ளதாகவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில், அகஸ்தியா தியேட்டர் உள்ள இடத்தை சங்கர நேத்ராலயா நிர்வாகம் 98 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து சங்கர நேத்ராலயா என்ற பெயரில் கண் மருத்துவமனையை நடத்தி வருவதாக விளக்கமளித்துள்ளனர்.