ஜெயமென்னும் பெயர்கொண்டு ஜெயித்துவந்த ஜெயாவம்மா ஜெயாமுதல்வர் பதவியுடன் ஜீவனையே கொடுத்துவிட்டார் ஜெகமதனில் ஜெயிப்பதற்கு ஜெயலலிதா ஆகிநின்றார் ஜெயித்துவிட்டார் உள்ளமெலாம் ஜெயாவம்மா வாழுகிறார் ! துணிவுகொண்ட பெண்ணானார் துயர்பலவும் தான்கண்டார் தனிமையிலே தவித்தாலும் தமிழ்நாட்டை நினைத்துநின்றார் அமுதான தமிழோடு ஆங்கிலமும் பேசிநின்றார் அதிமுகாவினது ஆணிவேராய் அவர் இருந்தார் ! அஞ்சாமல் ஆட்சிசெய்த அம்மாவைக் காண்பதெப்போ அவருடைய துணிவான அழகுதமிழ் கேட்பதெப்போ புன்சிரிப்பு பூத்துநிற்கும் பூமுகத்தைக காண்பதெப்போ புகழ்பூத்த பெண்மணியே உனைக்காணா அழுகின்றோம் ! ஆளுமைமிக்க அரசியல் தலைவியே ஆரையும்துணிவுடன் அணுகியே நின்றனை போரிடும்வல்லமை உறுதியாய் கொண்டனை காலனைவென்றிடும் வல்லமை இழந்ததேன் ! உன்முகத்தைக் காணாமல் உள்ளமெலாம் அழுகுதம்மா உன்னுழைப்பை உரமாக்கி உயரமெலாம் உயர்ந்தாயே என்னினிய தமிழ்மக்கள் எனவெங்கும் குரல்கொடுத்தாய் உன்னினிய குரல்கேளா ஓலமிட்டு அழுகின்றோம் !