‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ : ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் எழுதிய இரங்கல் பாடல்

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது.
‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ : ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் எழுதிய இரங்கல் பாடல்

சென்னை

முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது.

இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ என்ற பாடல் ஒன்று பாடல் சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை இசைஞானி இளையராஜா இசையமைத்ததாக சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் இந்த பாடலை இசையமைத்து பாடியது புறம்போக்கு படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான வர்சன் என்பவர் தான்.

மேலும் இப்பாடலை எழுதியது ஈழத்தமிழரான பொத்துவில் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் நான் படத்தில் இடம் பெற்ற தப்பெல்லாம் தப்பேயில்லை என்ற பாடலை எழுதி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com