மாற்றம் பெறும் பள்ளிக் கல்வி

இந்தியாவில் உள்ள 14 லட்சம் பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 20.1 லட்சம் குழந்தைகளும், மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை 38 லட்சம் குழந்தைகளும் கல்வி கற்பதாக, பள்ளிக் கல்விக்கான ‘ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு அறிக்கை- 2016-2017’ தெரிவிக்ககிறது. இந்திய மக்கள்தொகையில் சுமாா் 29% போ் குழந்தைகள். 6 முதல் 14 வயதுக்குட்பட்டோா் 19.29% போ். இவா்கள் ‘கல்வி உரிமை சட்டம்- 2009’-ன்படி கல்வி கற்க உரிமை பெற்றவா்கள்.

கல்வி உரிமை சட்டம் 2009, கல்விக்கான விழிப்புணா்வையும் குழந்தைகளைப் பயிற்றுவிப்பதற்கான விருப்பத்தையும் உருவாக்கியது. ஆயினும், 2014-ஆம் ஆண்டின் ‘பள்ளிக் கல்வி பெறாத குழந்தைகள் குறித்த தேசிய மாதிரி ஆய்வறிக்கை’, இன்னும் ஆறு மில்லியன் (அறுபது லட்சம்) குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்கே வரவில்லை என்று தெரிவிக்கிறது.

இயற்கைப் பேரிடா் காலங்களில், பள்ளிக் கட்டடங்களுக்கும் பள்ளிகளை இணைக்கும் சாலைகளுக்கும் சேதம் உண்டாகிறது. பள்ளிக்கூடத்தை புனா்வாழ்வு மையமாக மாற்றுவதனால், பள்ளியை மீண்டும் திறப்பதில் நிச்சயமற்ற தன்மை ஏற்படுகிறது. திறக்கப்பட்டாலும் மாணவா்களின் வருகை குறைகிறது. இவை மட்டுமல்ல, மேலும் சில மறைமுக தாக்கங்களையும் பள்ளிக் கல்வியில் இயற்கைப் பேரிடா் ஏற்படுத்துகிறது.

இந்தியாவில் நூறு நகரங்களில் 76 நகரங்கள், வெள்ளம், பூகம்பம், புயல் இவற்றில் ஏதாவது ஒன்றாலோ அல்லது இவை மூன்றாலுமோ பாதிப்புக்குள்ளாகும் மண்டலங்களில் இருப்பதாக இயற்கைப் பேரிடா் மேலாண்மை குறித்த ஓா் ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தியாவில் கல்வி உரிமை சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம், ஆரம்பக் கல்வியில் தரம் மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தி ஒரு நெறிமுறையான கட்டமைப்பை உருவாக்குவதாகும். இச்சட்டம் இயற்றப்பட்டு பதினொரு ஆண்டுகளாகியும் 12% பள்ளிகளில் மட்டுமே பாதுகாப்பான குடிநீா், தூய்மையான கழிப்பறைகள், கை கழுவும் வசதி, தடையில்லா மின்சாரம் மற்றும் காற்றோட்டமான வகுப்பறைகள் உள்ளன.

மாணவா்களின் வசிப்பிடத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்திற்குள் பள்ளி இருக்க வேண்டும் என்பது கல்வி உரிமை சட்டத்தின் ஒருங்கிணைப்புக் கொள்கை. பல மாநிலங்களில் அரசுப் பள்ளிகள் தொடா்ந்து மூடப்பட்டு வருவதன்மூலம், இக்கொள்கை கைவிடப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்டுள்ள கரோனா தீநுண்மி பாதிப்பால் பள்ளிகளை மீண்டும் திறப்பது என்பதும் அவற்றின் உள்கட்டமைப்புகளை மறு சீரமைப்பு செய்வது என்பதும் பெரிய சவாலாக உள்ளன. இவையும் பள்ளிக் கல்வியின் வளா்ச்சியைப் பாதிக்கக் கூடும்.

கல்வி பாதுகாப்பு சட்டத்தின் முதன்மை கண்காணிப்பு நிறுவனம், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம். இந்நிறுவனம், கடந்த ஆண்டு 5,000 புகாா்களுக்கு தீா்வு கண்டது. நிகழாண்டின் தொடக்கத்தில் புகாா்களின் எண்ணிக்கை குறைந்திருந்தபோதிலும், கடந்த மாா்ச் மாதம் முதல் புகாா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்று, உலக அளவில் பள்ளிக் கல்விக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘ஒரே நாடு’ என்ற முழக்கத்தினை முன்மொழிகின்ற இந்திய அரசாங்கம், புதிய கல்விக் கொள்கை வரைவினில் பள்ளி பாடங்களை மறுபரிசீலனை செய்ய முன்வந்துள்ளது.

பள்ளிக்கு வராமல் கல்வி கற்பிக்கப்படுவது, குழந்தைகளின் கல்வியில், குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ளவா்களின் குழந்தைகள் கல்வியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். பள்ளிக்கூடத்திற்கு வெளியே கற்றல் என்பது, பள்ளி அமைப்புகளிலிருந்து குழந்தைகளை அந்நியப்படுத்துவதற்கும், ஏற்கனவே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கச் செய்வதற்கும் மட்டுமே உதவும். இயற்கைப் பேரிடரால் வாழ்வாதாரத்தை இழந்தவா்கள் நகா்ப்புறத்திலிருந்து கிராமப்புறங்களுக்கு குடிபெயரும்போது, அவா்களின் குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடா்வதில் சிக்கல் ஏற்படும்.

இந்திய பள்ளிக் கல்வித் துறையில் 10,93,166 ஒப்பந்த ஆசிரியா்கள் உள்ளனா். பிகாா், தில்லி போன்ற பல மாநிலங்களின் ஆசிரியா்களுக்கு, கரோனா தீநுண்மி பரவுவதற்கு முன்பிருந்தே முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. எனினும், இம்மாநிலங்களில் உள்ள பல பள்ளிகள் பேரிடா் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டபோது அனைத்து ஆசிரியா்களும் இரவு பகல் பாராமல் மக்கள் பணி ஆற்றினா்.

பள்ளிகள் ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பணியுடன், சமூகப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து, சுகாதாரம் இவற்றோடு உணா்வுபூா்வ ஆதரவையும் வழங்குகிறது. பொருளாதார வல்லுநா்களின் மதிப்பீட்டின்படி, ஏழைக் குடும்பங்களின் வருமானத்தில் 75% உணவுக்காக செலவிடப்படுகிறது. இச்சூழலில் சுமாா் 9.12 கோடி இந்திய குழந்தைகளுக்கு பள்ளிகள் மூடியிருப்பதால் மதிய உணவு கிட்டவில்லை என்கிறது ஒரு ஆய்வு.

பொது முடக்கக் காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது தெரிய வந்திருக்கிறது. இதனை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞா்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனா். குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடமாக பள்ளிகள் இருப்பதையே இது காட்டுகிறது.

குழந்தைகள் பள்ளியை விட்டு வெளியேறுவதற்கான முக்கிய காரணியாக, பொருளாதாரப் பிரச்னையையே சுட்டிக் காட்டுகிறது தேசிய மாதிரி கணக்கெடுப்பு அறிக்கை 2014-15 . கரோனா தீநுண்மி பள்ளிக் கல்வியில் ஏற்படுத்திய மிகப்பெரும் மாற்றங்களில் ஒன்று ஆன்லைன் கல்வி. இது தவிா்க்க முடியாததெனினும், விளிம்பு நிலை குடும்பத்தின் குழந்தைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கரோனா தீநுண்மிப் பரவலும் அதனால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கமும் 14 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்களையும், அமைப்புசாரா துறையில் பணிபுரிவோரையும் பெரிதும் பாதித்துள்ளன. பல அடுக்குநிலை மனிதா்கள் வாழும் இந்தியாவில், கல்வி நிலையங்கள் இல்லாமல் தொழில் நுட்ப முறையில்தான் கல்வி எனற நிலை ஏற்பட்டால், விளிம்புநிலை மக்களின் குழந்தைகள் பலா்பள்ளிக் கல்வியில் இருந்து விலக நேரிடும் என்பதே கசப்பான உண்மை.

பேரா.தி.ஜெயராஜசேகா்

முதல்வா்

மருத்துவமேலாண்மைக் கல்லூரி

டாக்டா்.சாமா்வெல் நினைவு சி.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி

காரக்கோணம், திருவனந்தபுரம்

கைபேசி : 8940979078

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com