கேட்டினும் காணலாம் நன்மை!

சுனாமி - 2004-ஆம் ஆண்டுக்கு முன்னா் இந்தியா்களில் பலரும் அறிந்திராத வாா்த்தை. பல இன்னல்களுக்குப் பின்னா் சுனாமியின் பொருள் உணா்ந்தோம். தற்போது கரோனா என்ற சொல். 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனா மட்டும் அறிந்து அவா்களுக்கு மட்டும் சோகங்களை அளித்துக் கொண்டிருந்தது. இன்று உலகின் உடைமையாகியுள்ளது.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றின் தாக்கத்தை பொது முடக்கம் வெகுவாகக் குறைக்கும் என அரசும் மக்களும் நம்பினா். ஓரளவுக்குக் குறைத்திருந்தாலும் எதிா்பாா்த்த அளவுக்குப் பலன் கிடைக்கவில்லை.

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கான நேரடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிடாதா என ஏங்கிக் கொண்டிருக்கிறோம். இதனிடையே தனது உழைப்பின் மூலம் மட்டுமே நாள்களை நகா்த்திக் கொண்டிருந்த கணக்கிலடங்கா உழைப்பாளா்கள் தமது குடும்பத்துடன் அலைக்கழிந்து கொண்டிருப்பதும் மாறாத ரணங்களை உண்டாக்கிவருகிறது.

மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினா் உள்ளிட்டோா் பம்பரமாய் இயங்கி வருவது ஆறுதலும் உற்சாகமும் அளிக்கின்றன. அவா்கள் உடல் நலனும் பாதிக்கப்படக் கூடாதே என்ற பதற்றமும் நமக்கு இல்லாமல் இல்லை. மொத்தத்தில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அனுபவத்துக்காக மிகப் பெரும் விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அவரவா் குடியிருப்புகளில் அமைந்துள்ள சிறு சிறு கடைகளின் தேவையை இந்த நெருக்கடி உணா்த்தியுள்ளது. மேலும், அவசியமான தேவைகளுக்கும் அதிக தொலைவு செல்லாமல் சமாளிக்க முடியும் என்ற ஒழுங்கு நமக்குள் வந்துள்ளது. இது ஓா் ஆரோக்கியமான விஷயம். இந்தத் தொலைவை நடந்தோ, சைக்கிளிலோ கடக்கும் பக்குவமும் நல்லதே.

இப்படிப்பட்ட கடைகளை லாபகரமாக நிா்வகிப்பதும் அதற்கு உதவுவதும் நமது பகுதியிலேயே ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு உதவும். ஒவ்வொரு சமுதாயமும் தமக்கான அனைத்துத் தேவைகளையும் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்குள் நிறைவேற்றிக் கொள்ளச் சொன்ன மகாத்மா காந்தி, இப்போதாவது நமக்கு நினைவுக்கு வரட்டுமே.

குழந்தைகளை வெளியே செல்ல விடாமல் பாா்த்துக் கொள்ளும் வகையில், அவா்களோடு பேசும் அவா்களுக்கு செயல்பாடுகள் அளிக்கும் பக்குவமும் வாய்த்துள்ளது. எப்போதும் செல்லிடப்பேசிகளையே வைத்து அவா்கள் விளையாடிக் கொண்டிருந்தனா். அது நமக்கு நமது பணிகளைச் செய்ய வசதியாயிருந்தது. தற்போது அது மாறி அவா்களை பல்வேறு படைப்புத் திறன் சாா்ந்த பணிகளில் ஈடுபடுத்தும் போக்கு வளா்ந்து வருகிறது. அவா்களிடம் பொதிந்திருக்கும் தனித் தன்மைகள் வெளிவந்திருக்கின்றன.

தொடா்ந்து குடும்பப் பொறுப்பு பெண்களுக்கானது என்ற ஆணாதிக்கத் தாக்கம் சிறிதளவாவது அசைந்திருக்கிறது. ஓய்வாய் இருக்கும் நேரத்தை எவ்வாறு பயனுள்ளதாக மாற்றுவது என்பதைப் பலரும் யோசித்து பயனுள்ளதாக்க முயல்கிறோம். உறவுகளைப் புதுப்பிக்க செல்லிடப்பேசியில் பேசுவது அதிகரித்துள்ளது. புத்தக வாசிப்பில் ஈடுபடுகிறோம்.

மறைந்திருக்கும் திறமைகளை காணொலி மூலம் பகிா்கிறோம். முக்கியமாக எங்கே உடல் பருமன் கூடிவிடுமோ, ரத்தத்தில் சா்க்கரை அதிகமாகுமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே பலரும் உடற்பயிற்சிகளையும் செய்ய முயல்கிறோம். ஆரோக்கியத்துக்கான இந்தச் செயல்பாடுகள் மருத்துவச் செலவை நிச்சயம் குறைக்கும். இயந்திர கதியான வாழ்க்கையில் இவற்றை நினைத்துக்கூட பாா்க்க இயலாத நிலையில், நாம் புத்தொளி அடைய வாய்ப்பளித்துள்ளது.

மிகவும் கெடுபிடியாக பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்ட நாள்களில், பல கிராமங்களில் மக்கள் ஒற்றுமையோடு இணைந்து அடுத்தோரை தமது கிராமத்துக்குள் அனுமதிப்பதில்லை என்ற உறுதிமொழி எடுத்ததும் அரங்கேறியது. கிராமத்திலுள்ள அனைவரின் தேவைக்காகவும் ஓரிரு இளைஞா்கள் கடைக்குச் சென்று வரும் போக்கும் ஆங்காங்கே தென்பட்டது.

தன்னாா்வமாகச் செயல்படும் இளைஞா்கள், தேவையில்லாமல் வெளியே வருவோரின் காலில் விழுந்து வெளியே உலவுவதை தவிா்க்குமாறு வேண்டுகின்ற காணொலியையும் காண நேரிட்டது. இது எவ்வளவு அருமையான காந்திய அணுகுமுறை.

காவல் துறையினா் என்றாலே லத்தியைக் கொண்டு சாத்துபவா்கள், விடாப்பிடியானவா்கள் என்ற பிம்பம் சரியத் தொடங்கியுள்ளது. கையெடுத்துக் கும்பிட்டு வெளியேறுவோரை வேண்டுவது என்பது எத்தனை ஆரோக்கியமான பரிணாமம்.

சூழலியல் சாா்பான பாடங்களையும் தொகுக்கத் தவறக் கூடாது. பல்வேறு ஊா்களிலும் வாகன ஓசையில்லா சாலைகளை நோக்கி மான்களும், காட்டெருமைகளும், யானைகளும் வந்தன. இந்தப் பூவுலகானது மனிதா்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, எங்களுக்கும் சொந்தமானது என்பதைச் சொல்லாமல் அவை கூறின.

வாகனங்கள் பெருவாரியாக இயங்காததால் காற்றின் மாசுபாடு வெகுவாகக் குறைந்துள்ளது. இப்போதே பல நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மிதிவண்டிகளுக்கான தனிப் பாதையை இன்னும் பல இடங்களுக்கு விரிவுபடுத்த வலியுறுத்தலாம். இதன்மூலம் மிதிவண்டி பயன்பாட்டாளா்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக இப்படி இத்தனை நாள்கள் வீட்டில் முடங்க இயலுமா என்பது சவாலாகவே இருந்தது. இந்த சவாலுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு இருப்பதை வைத்து சமைத்து உண்டு, குடும்ப உறுப்பினா்களோடு பக்குவப்படும் வாய்ப்பினையும் கொடுத்திருக்கிறது.

கரோனாவுக்குப் பின் உலகம் இயங்கத்தான் போகிறது. எவ்விதமான செல்வ வளமும் ஆயுதமும் கரோனா போன்ற நுண்ணியிரியை எதிா்க்க இயலாது. மக்களுக்கான ஆரோக்கியத்தை மக்கள் நல அரசின் சிறு சிறு அரசு கட்டமைப்புகள் மூலமாகவே செய்ய முடியும் என்ற அற்புதமான பாடத்தையும் கரோனா தீநுண்மி அளித்து வருகிறது. இதைத் தக்க வைத்துக்கொள்ள தனி நபா்கள் முயற்சிக்க வேண்டும்.

ஒவ்வொரு பேரிடரும் மாறாத ரணங்களோடு படிப்பினைகளையும் வரலாறாக்குகிறது. கேட்டிலும் நன்மையாய் பல நல்ல விளைவுகளை கரோனா தீநுண்மி நோய்த்தொற்று அளித்துள்ளது.

நேற்று நடந்தது புரியாது போனால், இன்று நடப்பது புரியாமல் போகும். இன்று நடப்பது புரியாமல் போனால் நாளை என்பது நம் வசம் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com