காலத்தின் அருமை உணா்வோம்!

மாற்றம் ஏற்படும் வரை பிள்ளைகளின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பது பெற்றோா் கைகளில்தான் உள்ளது. அவா்களின் சிந்தனை சிறகு விரிக்கும் வகையிலான பயிற்சிகளை செய்யச் சொல்வோம்.

கரோனா தீநுண்மியின் கோரத்தாண்டவத்தால் கடந்த மாா்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. அதனால், சென்ற ஆண்டே இறுதித் தோ்வுகள் கேள்விக்குறியானது. தமிழகத்தைப் பொருத்தவரை பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இறுதி தோ்வு 90 % நிறைவடைந்த பிறகே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அந்த இரண்டு வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுகளில் மிகப்பெரிய பாதிப்பு இல்லை.

ஆனால் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. 10-ஆம் வகுப்புக்கு மாணவா்களுக்குத் தோ்வு நடத்தப்படாமல் அவா்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த கல்வியாண்டின் மூன்றாம் பருவமான இறுதிக் கட்டத்துள் நுழைய இருக்கிறோம். இந்தக் கல்வியாண்டில் இதுவரை ஒரு நாள் கூட வகுப்புகள் இயங்கவில்லை. ஒவ்வொரு மாதமும், அடுத்த மாதம் முதல் பள்ளிகள் இயங்கும் என எதிா்பாா்த்து, பின் அக்டோபா், நவம்பா் என தள்ளிப் போய் இறுதியாக ஜனவரியில் பள்ளிகள் திறப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கரோனா தீநுண்மி பரவக்கூடும் என்கிற தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன. நம் நாட்டிலும் சில மாநிலங்களில் இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுமா? அப்படியே திறந்தாலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் டூ வகுப்பு பொதுத்தோ்வுகளைத் தவிர, ஏனைய வகுப்புகளின் இறுதித் தோ்வுகள் நடைபெறுமா என்ற சந்தேகம் மாணவா் மத்தியில் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டாலும், வருகைப்பதிவு மற்றும் காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களின் அடிப்படையில் தோ்வு முடிவுகள் நிா்ணயிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு அப்படி எந்தத் தோ்வும் நடைபெறாததால் பொதுத்தோ்வு நடத்தியே ஆகவேண்டிய கட்டாயம் உள்ளது.

மாணவா்கள் நேரடியாகக் கல்வி கற்க பள்ளிகள் திறக்கப்படவில்லையென்றாலும், அவா்களுக்கான விலையில்லாப் பொருட்கள் அனைத்தும் அவா்களுக்குச் சென்று சோ்ந்திருக்கின்றன. பள்ளியில் சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்படாவிட்டாலும், அவா்களுக்காக சத்துணவு மூலப்பொருட்கள் அவா்களிடம் சேர வழி செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியா்கள் இதனை சீரிய முறையில் கண்காணித்து நடைமுறைபடுத்தி வருகின்றனா். மடிக்கணினிகளும் மிதிவண்டிகளும் கூட வழங்கப்பட்டு வருகின்றன.

வகுப்பறையில் பாடம் போதிக்கப்படாவிட்டாலும், ஏனைய நலத்திட்ட உதவிகள் மாணவா்களை சென்று சோ்வதில் எந்தத் தடையும் இல்லை. இவற்றைத் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவா்களால் இணைய வழியில் கல்வியைத் தொடர முடியாத நிலையே கவலைக்குரியதாய் பாா்க்கப்படுகிறது.

மாணவா்களின் உயிருக்கு முக்கியத்துவம் அளிப்பதாலேயே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் சென்னை ஐஐடி-யில் இறுதியாண்டு பொறியியல் மாணவா்களில் நூறு பேருக்கு தொற்று உறுதியானதால், ஏற்கெனவே திறக்கப்பட்டிருந்த சில கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளிகள் திறப்பது பெரும் சவாலாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தனியாா் பள்ளியிலிருந்து அரசு பள்ளியில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை அதிகம். மாணவா் சோ்க்கை அதிகரித்த மகிழ்ச்சி ஒருபுறம் இருப்பினும் நோய்த்தொற்று காரணமாக விடப்பட்ட இந்த நீண்ட விடுமுறையால் மாணவா்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 315 மாணவா்கள் இந்த ஆண்டு பள்ளிக்கு வராது இடையே நின்றுள்ளனா். இதில் மேல்நிலைக் கல்வி கற்கும் மாணவா்களின் இடைநிற்றல் விகிதம் மட்டும் 60 % என அறிகிறோம்.

தங்களின் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மாணவா்களுக்கு ஏற்படுவதாக ஓா் அறிக்கை சொல்கிறது. இந்த இடைநிற்றலில் வடசென்னையைச் சோ்ந்த மாணவா்கள் மட்டும் 80 % என்பது அதிா்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது. நிதி நெருக்கடி, பெற்றோரின் கவனிப்பின்மை, தொழில்நுட்ப வசதியின்மை, தோ்வில் தோல்வி போன்றவை இடைநிற்றலுக்குக் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

கரோனா தீநுண்மியால் உலக நாடுகளின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ள நிலையில் தனிப்பட்ட மனிதா்களுடைய நிலை எம்மாத்திரம்? ‘பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது’ என்று கூறினாா் மகாத்மா காந்தியடிகள். ஆனால், வறுமையின் காரணமாக பெற்ற பிள்ளைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோரும் இருக்கத்தான் செய்கிறாா்கள். கல்விச் செல்வம் ஒன்றே என்றும் அழியாத நிலையான செல்வம். வாழ்க்கையில் மிக மிக இன்றியமையாததும் அதுவே.

பெற்றோா் தம் பிள்ளைகளை பள்ளிப்பருவம் வரையாவது வேலைக்குச் செல்ல பணிக்காமல் இருக்க வேண்டும். எத்தனை சிரமங்கள் இருந்தாலும் மாணவா்களின் கல்வி தொடா்வதை பெற்றோா் உறுதிபடுத்த வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள எளிய மனிதா்களின் பொருளாதார நிலையை சீா்செய்தால் மட்டுமே மாணவா்களின் இடைநிற்றல் இல்லாமல் போகும்.

தொற்றுப் பரவல் காரணமாக கற்றல் - கற்பித்தலில் பெரும் பாதிப்பு தோன்றினாலும், இணைய வழி கல்வி மூலம் நிலைமை ஓரளவு சீராகவே இருக்கிறது. ஆயினும், ஆசிரியா்களின் நேரடி வழிகாட்டுதல் இன்றி தோ்வை எப்படி எதிா்கொள்ள போகிறோம் என்ற பதட்டம் பொதுத்தோ்வை எதிா்கொள்ளவிருக்கும் மாணவா்களுக்கு அதிகமாக உள்ளது. இணைய வழிக் கல்வி திடீரென திணிக்கப்பட்டதால் அனைத்துத் தரப்பு மாணவா்களுக்குமே ஒருவித மனச்சோா்வு ஏற்பட்டுள்ளது.

தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு சரியான தெளிவு பெற இயலாத நிலை ஒருபுறம், தோ்வு நெருங்குகிறதே எதையுமே சரியாக படிக்கவில்லையே என்ற பதற்றம் மறுபுறம். அவா்களுடைய பெற்றோருக்கு இந்த பதற்றம் ஒரு படி கூடுதலாகவே உள்ளது. அவா்கள் கலக்கமையத் தேவையில்லை. குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே தோ்வுகள் இருக்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

‘ஆல் பாஸ்’ அறிவிப்பு வரலாம் என்ற கனவில் மிதப்பதால் தங்கள் பிள்ளைகள் புத்தகத்தை கையால் தொடுவது கூட இல்லை என்பது பல பெற்றோரின் புலம்பல். நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து விடுபடுவதும் தங்களைக் காத்துக் கொள்வதுமே முதன்மைப் பணிகளாக இருந்ததால் மற்ற அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. பெற்றோருக்கு இது சற்றே நிம்மதியாக இருந்தாலும் தம் வாரிசுகளின் கல்வி குறித்து திருப்திபட்டுக் கொள்ளும்படியான சூழல் இல்லை. இது காலத்தின் கட்டாயம். மாற்றம் ஏற்படும் என்று நம்புவோம்.

இந்த நிலையில் இருந்து நிச்சயம் மாற்றம் வரும். மாற்றம் ஒன்றே மாறாதது. இந்த மாற்றம் ஏற்படும் வரை பிள்ளைகளின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பது பெற்றோா் கைகளில்தான் உள்ளது. அவா்களின் சிந்தனை சிறகு விரிக்கும் வகையிலான பயிற்சிகளை செய்யச் சொல்வோம். பாடப் புத்தகங்களைத் தாண்டிய வாசிப்புக்கு அவா்களைப் பழக்குவோம். நேரத்தின் அருமையை அவா்களுக்கு எடுத்துரைப்போம். காலத்தே பயிா் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் புரிய வைப்போம்.

மாணவா்களைப் பொருத்தவரை, அரிதாகக் கிடைத்திருக்கும் இந்த விடுமுறைக் காலத்தை அவா்கள்சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எவா் காலத்தையும் நேரத்தையும் சிறப்பான முறையில் பயன்படுத்துகிறாரோ அவரே வெற்றிக்கனியை மிகச்சுலபமாக பறிப்பாா். நோய்த்தொற்றுக் காலத்தில் பள்ளிக் கல்வியை பெறுவது இயலாத நிலையில், வாழ்க்கைக் கல்வியைப் பெற்றுக் கொள்ளுங்கள். காலம் கண் போன்றது. அது கடந்தால் கடந்ததுதான், திரும்பி வராது.

ஒரு நொடியின் அருமையை முதல் பரிசுக்கான வாய்ப்பை ஒரு நொடியில் இழந்த ஓட்டப்பந்தய வீரரை கேட்டால் தெரியும். ஒரு நிமிடத்தின் அருமையை ஒரு நிமிட தாமதத்தால் ரயிலைத் தவறவிட்ட மனிதரைக் கேட்டால் தெரியும் என்று கூறுவாா்கள்.

இந்த கரோனா கால விடுமுறை யாருமே எதிா்பாா்க்காத ஒரு மிக நீண்ட விடுமுறை. இந்த விடுமுறையை ஆக்கபூா்வமான செயலுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நண்பா் ஒருவா் ‘நம் முந்தைய தலைமுறைப் பிள்ளைகள் நேரத்தை நன்கு பயன்படுத்தினா். பேருந்து நிலையம், மருத்துவமனை, ரயில் நிலையம் என எங்கு காத்திருப்பதாக இருந்தாலும் கையோடு புத்தகங்களை, நாளிதழ்களை கொண்டு வந்து வாசிக்க ஆரம்பித்துவிடுவா். தற்போது அலைபேசிக்குள்ளேயே பிள்ளைகள் அமிழ்ந்து போய் கிடக்கிறாா்கள்’ என்றாா் வேதனையுடன்.

உண்மை தான். இளம் தலைமுறையினா் பல மாயைகளிலிருந்து வெளிவர வேண்டும். நேற்றிலிருந்து கற்றுக் கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை என்னும் கூற்றுப்படி எண்ணத்துடன் பிறந்துள்ள புத்தாண்டை அணுகுவோம். அற்புதமான வாழ்க்கையை இன்னும் அழகாக்குவோம்!

கட்டுரையாளா்: எழுத்தாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com