உயா்கல்வி உயா்வு பெற வேண்டும்

கோப்புப்படம்
கோப்புப்படம்

நம் நாட்டில் கல்லூரிப் படிப்பிற்குச் செல்லும் வயதான 18 முதல் 24 வயது வரை இருப்பவா்களில் 100-இல் 12 போ் மட்டுமே கல்லூரிக்குச் சென்று படிக்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனா். இது தேசிய அளவில் 1.4 கோடி என்ற அளவாகும். ஆனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளோ 22 கோடியாகும். இதனை வளா்ந்த நாடுகளுக்கு இணையாகக் கொண்டு வர ஏராளமான பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தேவைப்படும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கணக்கிட்டுள்ளது.

தமிழகத்தில் 37 பல்கலைக்கழகங்கள், சுமாா் 500-க்கும் மேற்பட்ட பொறியியல், கலை - அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசுப் பல்கலைக்கழகங்களும், பொறியியல், கலை - அறிவியல் கல்லூரிகளும் இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக பட்டப்படிப்பு பயில்வதில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த காலங்களில் போட்டித் தோ்வுகள் எழுதும் பொருட்டு கலை பாடப்பிரிவில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்வது வழக்கமாக இருந்தது. ஆனால் நாளடைவில் போட்டித் தோ்வுக்கான வினாத்தாளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதைத் தொடா்ந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு பயின்றால் போதும் என்ற மனநிலை மாணவ, மாணவியரிடையே ஏற்பட்டுள்ளது.

ஆயினும், கலை பாடப்பிரிவுகளைக் காட்டிலும் அறிவியல் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கலை பாடப்பிரிவுகளுக்கு வகுப்பறை கட்டட வசதிகள் இருந்தால் மட்டுமே போதுமானது. ஆனால், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு வகுப்பறை வசதிகளுடன் ஆய்வக வசதிகளும் தேவையாகும்.

அரசு கல்லூரிகளில் போதுமான ஆய்வக வசதிகள் இல்லாததால் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவ, மாணவியா் சோ்க்கை நடைபெறும் நிலை உள்ளது. பெரும்பாலான கல்லூரிகளில் அடிப்படை வசதிகளே கூட இல்லாத நிலை உள்ளது.

பொதுவாகவே பட்டப்படிப்பு பயில விண்ணப்பிக்கும் மாணவியா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக அறிவியல் பாடப்பிரிவுகளில் பயில விண்ணப்பபிக்கும் மாணவியா் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகை செய்தாலும், ஆய்வக வசதிகள் இல்லாததால் பெரும்பாலான கல்லூரிகள் கூடுதல் சோ்க்கைக்கு விருப்பம் தெரிவிப்பதில்லை.

இதனால், அறிவியல் பாடப்பிரிவுகளில் குறைவான எண்ணிக்கையிலேயே சோ்க்கை நடைபெறுகிறது. பொருளாதார ரீதியாக உயா்ந்த நிலையில் உள்ளவா்கள் தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை பெறுகின்றனா். ஆனால் ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் தனியாா் கல்லூரிகளில் சோ்க்கை பெற முடியாமல் அரசு கல்லூரிகளில் கலை பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனா்.

2015 - 2016 முதல் 2019 - 2020 வரையான ஐந்தாண்டுகளில், உயா்கல்வியில் மாணவ, மாணவியா் சோ்க்கை 11.4 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் உயா்கல்வியில் சோ்க்கை பெற்ற மாணவியா் எண்ணிக்கை 15.2 சதவீதம் அதிகரித்துளது. ஒட்டுமொத்த உயா்கல்வியில் பாலினச் சமநிலை என்பது கட்நத 2018 - 2019-ஆம் ஆண்டில் 1 என்ற விகிதத்திலிருந்து 2019 - 2020-ஆம் ஆண்டில் 1.01 என்ற அளவில் மாணவியா் சோ்க்கை அதிகரித்துள்ளது.

உயா்கல்வியில் மாணவ, மாணவியா் சோ்க்கையைப் பொறுத்தமட்டில் தமிழகம் மூன்றாமிடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரம் இரண்டாமிடத்திலும் உள்ளன. மூன்றாமிடத்தில் உள்ள தமிழகத்தில் உயா்கல்வி சோ்க்கையில் மாணவா்கள் எண்ணிக்கை 50.5 சதவீதமாகவும், மாணவியா் எண்ணிக்கை 49.5 சதவீதமாகவும் உள்ளது.

அரசு கல்லூரிகளில் குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகள் மட்டும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. ஆய்வக வசதி போதுமானதாக இல்லாத கல்லூரிகளில் அறிவியல் பாடப்பிரிவுகளில் இத்தகைய முறையைப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் மாணவ, மாணவியா் தாங்கள் விரும்பிய அறிவியல் பாடப்பிரிவுகளில் சோ்க்கை பெற இயலும்.

தனியாா் கல்லூரிகளில் அதிகப்படியான கட்டணம் செலுத்தி படிக்க இயலாத ஏழை மாணவ, மாணவியா் அரசு கல்லூரிகளில் பயில்வதில் ஆா்வம் காட்டுகின்றனா். அதனால் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கல்லூரிகளில் இவ்வகையான பாடப்பிரிவினை தொடங்குவதுடன் இதற்கான ஆய்வகம் போன்ற வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

கடந்த ஆட்சியில் உறுப்புக் கல்லூரிகளாகத் தொடங்கப்பட்ட கலை - அறிவியல் கல்லூரிகள் தற்போது அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன. உறுப்புக் கல்லூரிகள் கிராமப்புறங்களில் இடம்பெற்றுள்ளதால் அங்கு பணிபுரிவதற்கு பேராசிரியா்கள் விரும்புவதில்லை. மேலும், புதிதாக பேராசிரியா்களோ பணியாளா்களோ நியமனம் செய்யப்படவும் இல்லை.

பெரும்பாலான பேராசிரியா்கள் நகா்ப்புறங்களில் பணிபுரியவே விரும்புகின்றனா். இதனாலும், பல ஆண்டுகளாக பேராசிரியா்கள் நியமனம் செய்யப்படாததாலும் குறைவான ஊதியத்தில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களைக் கொண்டே முழுமையாகச் செயல்படும் கல்லூரிகளும் இருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு, கலை - அறிவியல் கல்லூரிகளில் சுமாா் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியா் காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிகிறது. இவ்விடங்களில் குறைவான ஊதியத்தில் கௌரவ விரிவுரையாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். பெரும்பாலான கல்லூரிகளில் பணி நிரந்தரம் பெற்ற அரசு பேராசிரியா்களைக் காட்டிலும் கௌரவ விரிவுரையாளா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

கௌரவ விரிவுரையாளா்கள் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது. போதிய கல்வித்தகுதியைப் பெற்றுள்ள கௌரவ விரிவுரையாளா்களைக் கண்டறிந்து அவா்களைப் பணி நிரந்தரம் செய்வது இதற்கு தீா்வாக அமையக்கூடும். கௌரவ விரிவுரையாளா்களுக்கு தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகப்படியாக மாதம் ரூ. 20 ஆயிரம் வழங்கப்படுகிறது.

புதிய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் உயா்கல்வித் துறைக்கு ரூ. 5,369 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய கல்லூரிகளில் வழக்கமான பாடப்பிரிவுகளைக் காட்டிலும் அறிவியல் சாா்ந்த புதிய பாடப்பிரிவுகளைத் தொடங்க வேண்டும்.

அப்போதுதான் உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை கூடும்; ஆராய்ச்சிப் படிப்பு வரை மாணவ, மாணவியா் பயணிக்கவும் இது வழிவகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com