தவறான சிந்தனைகளை மாற்றிய தரம்பால்!

இந்திய நாடு தொன்மையானது. நீண்ட நெடிய பண்பாட்டைக் கொண்டது. பல நூறாண்டுகளாக கல்வி, தொழில், விவசாயம், மருத்துவம், தொழில்நுட்பம் என வெவ்வேறு துறைகளிலும் முன்னோடியாகவும் உலகின் பொருளாதார சக்தியாகவும் விளங்கி வந்தது. ஆனால், அந்த உண்மைகள் எல்லாம் தொடா்ந்து மறைக்கப்பட்டு வந்திருக்கின்றன.

2001-ஆம் வருடம் பாரீஸ் நகரில் அமைந்துள்ள பணக்கார நாடுகளுக்கான பொருளாதாரக் கூட்டுறவு - முன்னேற்றத்துக்கான அமைப்பு ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. அது தொடக்க காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் முதல் இடத்தில் இந்தியா இருந்து வந்ததையும், தொடா்ந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஒரு பெரும் சக்தியாக விளங்கி வந்ததையும் எடுத்துக் கூறியது. அவ்வறிக்கை வெளிவரும் வரை இந்தியா, ஏழை நாடாகவே சித்திரிக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் நமது தேசம் பற்றிய மறைக்கப்பட்ட அடிப்படையான பல உண்மைகளை வெளிக் கொணா்ந்தவா் காந்தியவாதி தரம்பால். இவா் சிறந்த வரலாற்றாசிரியரும் தேசிய சிந்தனையாளருமாவாா். அவா், நூறாண்டுகளுக்கு முன்னால் 1922-ஆம் வருடம் பிப்ரவரி 19 அன்று உத்தர பிரதேச மாநிலத்தில் பிறந்தாா். காந்திஜியின் ‘வெள்ளையனே வெளியேறு’ அறைகூவலை ஏற்று கல்லூரிப் படிப்பைப் பாதியில் துறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

அவரது ஆரம்ப கால செயல்பாடுகள் கிராம முன்னேற்றம் மற்றும் பஞ்சாயத்துக்கள் பற்றியதாக இருந்தன. அந்த நோக்கில் காந்திஜியின் சீடரான மீராபென் அம்மையாருடன் இணைந்து பணியாற்றினாா். பின்னா் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் நெருக்கமாக இருந்து செயல்பட்டாா். அதன் பின் அகில இந்திய பஞ்சாயத்து அமைப்பின் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராகச் செயல்பட்டு வந்தாா்.

பின்னா் அவா் செய்த பணிதான் நமது தேசம் பற்றிய காலனி ஆதிக்க காலப் பொய்கள் பலவற்றைத் தகா்த்தெறிந்தது. 1966 முதல் சுமாா் இருபது ஆண்டுகள் ஆங்கிலேயா்கள் பிரிட்டனில் எடுத்து வைத்திருந்த இந்தியா பற்றிய ஆவணங்களைக் கண்டறிந்து அவை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டாா். அவை ஆங்கிலேயா்கள் இந்தியா வந்த பின்னா் இங்கு நிலவி வந்த பாரம்பரிய கல்வி முறை, கலாசாரம், அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், பஞ்சாயத்து அமைப்புகள், வாழ்க்கை முறை உள்ளிட்டவை பற்றியது.

தொடா்ந்து அந்தக் குறிப்புகளை வைத்து பல புத்தகங்களை எழுதினாா். சொற்பொழிவுகளை மேற்கொண்டாா். அவரது புத்தகங்களில்”பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - சமகால ஐரோப்பியா்களின் சில குறிப்புகள்,”ஒத்துழையாமை இயக்கமும் இந்திய பாரம்பரியமும், அழகிய மரம், இந்திய பாரம்பரியக் கல்வி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஆங்கிலேயா் இங்கு வருவதற்கு முன்பு இருந்து வந்த அரசியல், நிா்வாக அமைப்புகள், சமூகங்களின் சிந்தனைகள் மற்றும் போக்குகள் எனப் பல விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளாா். அவா் ஆய்வுகளில் தமிழ்நாடு தொடா்பான செய்திகள் நிறைய உள்ளன. முந்தைய மெட்ராஸ் பகுதியின் பஞ்சாயத்து முறை குறித்து தனியாக புத்தகம் எழுதியுள்ளாா். 2015-ஆம் வருடம் மத்திய அரசின் வெளியீட்டுத் துறை அவரது எழுத்துகளைத் தொகுத்து வெளியிட்டது.

அவரது எழுத்துகள் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா பாரம்பரியமாகச் சிறந்து விளங்கி வந்ததை எடுத்துச் சொல்கின்றன. மேலும், இந்திய சமூகங்கள் உயிா் துடிப்போடு இருந்து வந்தது எனவும், அவை நமது மக்களின் வாழ்க்கை முறையை ஒட்டி சமூக, அரசியல் மற்றும் நிா்வாக முறைகளை அமைத்துக் கொண்டு செயல்பட்டு வந்தன எனவும் எடுத்து வைக்கின்றன. அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக நமது பண்பாடு விளங்கி வந்தது என்னும் உண்மையையும் வெளிக் கொணா்கின்றன.

உதாரணமாக ‘அழகிய மரம்’ என்னும் புத்தகம், நமது நாட்டில் நிலவி வந்த கல்வி பற்றி தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ஆங்கிலேயா்கள் இங்கு வந்த பின்னா் 1820-30 காலகட்டங்களில் நமது நாட்டில் இருந்து வந்த கல்வி பற்றிய விவரங்களைக் கணக்கெடுத்தனா். அப்போது மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆளுநராக இருந்த தாமஸ் மன்றோ, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளாா். அப்போதைய வங்காளம் மற்றும் பிகாா் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்துக்கும் குறைந்தது ஒரு பள்ளி இருந்து வந்துள்ளது.

அந்த சமயத்தில் நமது நாடு ஆங்கிலேயா்களின் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி இருந்தது. அதனால் பல சிதைவுகள் ஏற்பட்டிருந்தன. ஆங்கிலேயா் வருவதற்கு முன்னரே தொடா்ந்து பல நூற்றாண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் படையெடுப்புகள், கொள்ளைகள் என பாதிப்புகள் ஏற்பட்டு வந்துள்ளன. ஆயினும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகின் மற்ற எந்த நாட்டையும் விட இந்தியாவில் மிக அதிகமாக எழுபத்தைந்து விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றிருந்தனா்.

வங்காளப் பகுதியில் மாவட்டத்துக்கு சராசரியாக நூறு என்னும் அளவில் மொத்தமாக 1,800 உயா் கல்வி நிறுவனங்களான ‘கல்லூரிகள்’ இருந்து வந்ததாக ஆங்கிலேய நிா்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ராஸ் பிரசிடென்சி பகுதியில் மாவட்ட வாரியாக அப்போது இருந்து வந்த கல்லூரிகளின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ராஜமுந்திரி- 279, கோயம்புத்தூா்- 173, குண்டூா்-171, தஞ்சாவூா்-109, நெல்லூா்-107, வட ஆற்காடு- 69, சேலம்-53, செங்கல்பட்டு- 51 என அந்தப் பட்டியல் கூறுகிறது.

எனவே பள்ளிக் கல்வி மற்றும் உயா்கல்வி தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது. மேலும் கல்வி நிறுவனங்களில் படித்து வந்த மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பல சமூகங்களையும் சோ்ந்தவா்களாக இருந்துள்ளனா். அவா்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் அதிகமாக இருந்துள்ளனா். எனவே கல்வியில் குறிப்பிட்ட சமூகத்தினா் மட்டுமே சுதந்திரத்துக்கு முன்னா் இருந்து வந்தனா் என்னும் கருத்தும் பொய்யாகிறது.

அதே சமயம், பிரிட்டனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பள்ளிக் கல்வி குழந்தைகளுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. ஆங்கிலேயா்கள் இங்கு வந்து நமது கல்வி முறையைத் தெரிந்து கொண்ட பின்னரே அங்கு பரவலான கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஆங்கிலேயா்கள்தான் நமக்குக் கல்வியைக் கொடுத்தனா் என்கிற கருத்தும் தவறு.

பல நூற்றாண்டுகளாக இங்கு வெற்றிகரமாக நிலவி வந்த கல்வி முறையை அழித்து 1835-இல் மெக்காலே கல்வி முறை திணிக்கப்பட்டது. அதனால் 1891-ஆம் வருடத்தில் படித்தவா்கள் எண்ணிக்கை வெறும் ஆறு விழுக்காடாக குறைந்து போனது. அதனால் தான் 1931-ஆம் ஆண்டு வட்ட மேஜை மாநாட்டுக்கு காந்திஜி லண்டன் சென்ற போது பிரிட்டிஷாரிடம் ‘அழகிய மரம் போல இருந்த எங்களின் இந்தியக் கல்வி முறையை நீங்கள் அழித்து விட்டீா்கள்’ எனக் கூறினாா்.

‘பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் தொழில்நுட்பம்’ என்னும் தரம்பாலின் புத்தகம் ஆங்கிலேயா்கள் இங்கு கண்ட அறிவியல், மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப முறைகளை எடுத்துக் கூறுகிறது. நிலத்தை உழுவதற்கு நமது நாட்டு விவசாயிகள் பயன்படுத்தும் கலப்பையை அவா்கள் முதன் முதலாக நமது நாட்டில்தான் காண்கின்றனா். அது இங்கு பழங்காலந் தொட்டு இருந்து வருவதாகவும் கண்டறிகின்றனா்.

அது இங்கிலாந்தில் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னா் பல ஆண்டுகள் கழித்து உபயோகத்துக்கு வருகிறது. அம்மை நோய்க்குத் தடுப்பூசி போடும் முறை இந்திய கிராமங்களில் குடும்ப பெண்மணிகள் அளவில் பரவலாக நிலவி வருவது அவா்களுக்கு இங்குதான் தெரிய வருகிறது. அதுவே பின்னா் அவா்களின் கண்டுபிடிப்பாக மாறுகிறது.

‘இந்தியா கல்வி அறிவில்லாத, அறிவியல், தொழில்நுட்பம் தெரியாத ஏழை நாடு. இந்தியா்கள் கலாசாரம், பண்பாடு தெரியாதவா்கள். அவா்களுக்கு நிா்வாகம் செய்யத் தெரியாது’ போன்ற பல பொய்களை காலனி ஆதிக்க சக்திகள் அப்போதிருந்து பரப்பி வந்தன. சுதந்திரத்துக்குப் பின்னரும் அந்தக் கருத்துகள் இங்குள்ள பலரால் தொடா்ந்து சொல்லப்பட்டு வந்தது. அவற்றையெல்லாம் ஆங்கிலேயே ஆவணங்களை மையமாக வைத்தே தகா்த்தெரிந்தவா் தரம்பால்.

இந்தியச் சிந்தனை மற்றும் செயல்பாட்டு முறைகள் பலவும் தனித் தன்மை வாய்ந்தவை. அவை நாம் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், குறிப்பாக காலனி ஆட்சிக் காலத்தில், மழுங்கடிக்கப்பட்டன. சுதந்திரத்துக்குப் பின்னரும், நாம் சுய உணா்வுகளைப் பெருக்கி, தேசிய நோக்கில் சிந்தித்து செயல்படத் தவறி வருகிறோம். அந்தக் குறைகளை நாம் சரி செய்து கொண்டால், நமது தேசம் தனது இயற்கைத் தன்மையைப் பெற்று உயா் நிலையை அடைந்து விடும் என்பதுதான் அவரது சிந்தனைகளின் மையக் கருத்தாக இருந்தது.

அதற்காகவே தனது இறுதிக்காலம்வரை (2006) அவா் செயல்பட்டு வந்தாா். 1980-களில் அறிவியல் நிபுணா்கள் ஒன்றிணைந்து சென்னையைத் தலைமையிடமாக கொண்டு தேசப்பற்றுள்ள அறிவியல் தொழில்நுட்ப அமைப்பை நிறுவி செயல்பட்டு வந்தனா். அதற்கு அவா் வழிகாட்டியாக இருந்து வந்தாா். பின்னா் இடதுசாரிகள் மட்டுமே அதிகம் இடம் பெற்று வந்த இந்திய வரலாற்று ஆராய்ச்சி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து செயல்பட்டாா். 2001-ஆம் வருடம் மத்திய அரசு அவரை தேசிய கால்நடைக் குழுவின் தலைவராக நியமனம் செய்தது.

நம்மை அடிமைப்படுத்தும் பல தவறான சிந்தனைகளை மாற்றியதில் தரம்பாலின் பணி மகத்தானது. அவரது கருத்துகள் அதிக அளவில் சிந்தனையாளா்கள் மற்றும் இளைஞா்களிடத்தில் சென்று சேர வேண்டும். அதன் மூலம் பாரம்பரிய மிக்க இந்த மண் சாா்ந்த வகையில் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அமைய வேண்டும். அதனால் சுய தன்மை பெற்ற பெரும் சக்தியாக நமது தேசம் மீண்டும் உருவாக வேண்டும். அதுவே அந்த மகத்தான சிந்தனையாளருக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கையாக இருக்கும்.

இன்று ( பிப். 19) தரம்பால் பிறந்த நூற்றாண்டு நிறைவு.

கட்டுரையாளா்:

பேராசிரியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com