அப்பா வாங்கிய ரூ.5000 கடனுக்காக 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த மகன்! மின்வேலிக்குள் முடிந்த குழந்தைப் பருவம்!!

40 ஆண்டுகளுக்கு முன்பே, சட்ட விரோதமானது என்று கொத்தடிமைத் தொழில் முறை தடை செய்யப்பட்டிருந்த போதிலும், இது இந்தியா முழுவதும் லட்சக் கணக்கானவர்களை தொடர்ந்து பாதித்து வருகிறது.
அப்பா வாங்கிய ரூ.5000 கடனுக்காக 20 ஆண்டுகள் கொத்தடிமையாக இருந்த மகன்! மின்வேலிக்குள் முடிந்த குழந்தைப் பருவம்!!

தமிழ் நாட்டில் கொத்தடிமைத் தொழில்முறை எந்தளவுக்கு நிலவுகிறது?

40 ஆண்டுகளுக்கு முன்பே, சட்ட விரோதமானது என்று கொத்தடிமைத் தொழில் முறை தடை செய்யப்பட்டிருந்த போதிலும், இது இந்தியா முழுவதும் லட்சக் கணக்கானவர்களை தொடர்ந்து பாதித்து வருகிறது. அநேக நேரங்களில் பாதிக்கப் படுகிற குழந்தைகள், அரிசி ஆலைகள் அல்லது செங்கல் சூளைகள் போன்ற பணியிடங்களில் பிறந்து அவர்களது பெற்றோர்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையும் வேலை செய்தே கழிக்கின்றனர். 

மின்சார வேலிக்குள் முடங்கிய குழந்தைப் பருவம்:

தமிழ் நாட்டிலுள்ள ஒரு அரிசி ஆலையில் பிறந்து அவருடைய சகோதரருடன் சேர்ந்து வளர்ந்த அப்புவின் வாழ்க்கைக் கதையும் இப்படித்தான் இருந்தது. இவனுடைய தந்தை வாங்கிய கடன் வெறும் ரூ. 5000 மட்டுமே. இருப்பினும், இந்தக் கடனை அடைப்பதற்குப் பல ஆண்டுகளாக அப்பு வேலை செய்ய வேண்டியிருந்தது. இப்போது, அப்புவின் மகனும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி அங்குத் தொடர்ந்து வேலை செய்து வருகிறான். 

அப்பு, அவருடைய குழந்தை பருவத்தை நினைத்துப்பார்க்கும் போது, அரிசி ஆலையில் வேலை செய்தது மட்டுமே அவரது நினைவில் இருக்கிறது. அதைத் தவிர, வேறு எதுவும் அவருக்கு நினைவில் இல்லை. அப்புவின் தந்தை அவருடைய வேலைப் பொறுப்புகள் என்ன என்பதை அவருக்கு கற்றுத் தந்து, பயிற்சியளித்திருந்தார். மற்ற பிள்ளைகளைப் போல பள்ளிக்கூடம் செல்வதற்கோ அல்லது நண்பர்களுடன் விளையாடுவதற்கோ அப்புவுக்கு நேரம் இருந்ததில்லை. சிறுவனாக இருந்த போதும் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் அரிசி மூட்டைகளை அப்பு சுமந்திருக்கிறார். அவருடைய தந்தை இறந்த பிறகும் கூடத் தனது தந்தையின் கடனை அடைப்பதற்கு, தொடர்ந்து வேலை செய்யுமாறு அவர் கட்டாயப்படுத்தப்பட்டார். அடிக்கடி மிக மோசமாக நடத்தப்பட்டதுடன், அரிசி ஆலையை விட்டு வெளியே செல்வதற்கும் அப்புவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

கொத்தடிமைத் தொழிலாளர்கள் அவர்களுடைய பணியிடத்தைவிட்டு வெளியே செல்வதற்கு பெரும்பாலும் தடைவிதிக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து வகையான சுதந்திரங்களும் இவர்களுக்கு மறுக்கப்பட்டன. சில நேரங்களில் வெளியே செல்ல அனுமதி கொடுக்கப்பட்டாலும் கூட, ஒட்டுமொத்த குடும்பங்களும் ஒன்றாகப் பணியிடத்தை விட்டுச் செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை. ஒரு நபர் எப்போதும் பணியிடத்தில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். இது, யாரும் வெளியே தப்பிச் செல்வதற்கு முயல்வதைத் தடுப்பதற்காக செய்யப்படுகிறது மற்றும் யார் பணியிடத்தை விட்டு வெளியேறிச் சென்றாரோ அவர் மீண்டும் திரும்பி வருவதற்குரிய வாய்ப்புகளை இது அதிகரிக்கச் செய்கிறது. 

அப்பு போன்ற குழந்தைகள் வெளியுலகிலிருந்து பிரித்து வைக்கப்பட்டு, அதனுடைய தாக்கங்கள் படாதவாறு வளர்கின்றனர். அவர்களுக்கு வேலை செய்வது மட்டுமே தெரியும் மற்றும் அவர்கள், கல்வி கற்காமல், மோசமான உடல் நலத்தோடு வளர்வதாலும் மற்றும் அவர்கள் பல்வேறு வகைகளில் மோசமாக நடத்தப்படுதலுக்கு உட்படுத்தப்படும் காரணத்தாலும், மற்றொரு தலைமுறையை வறுமை மற்றும் நம்பிக்கையின்மை என்ற சுழலில் தொடர்ந்து சிக்கவைக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சியிலேயே சட்ட விரோதமாக்கப் பட்ட குழந்தை தொழிளார் முறை:

அப்பு
அப்பு

குழந்தை தொழிலாளர் முறை என்பது, ஆங்கிலேயர் ஆட்சியின்கீழ் குழந்தை (தொழிலை அடைமானம் செய்தல்) சட்டம் இயற்றப்பட்ட 1933-ஆம் ஆண்டிலிருந்து சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றதிலிருந்து குழந்தை மற்றும் உரிய வயது வந்தவர்களைப் பாதுகாப்பதற்கு 1976-ம் ஆண்டு கொத்தடிமைத் தொழில் முறை (ஒழிப்பு) சட்டம் மற்றும் 1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை)ச் சட்டம் உள்ளிட்ட வேறு பல சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளன. கொத்தடிமைத் தொழில் முறையை இச்சட்டங்கள் சட்டவிரோதமாக ஆக்கியுள்ள போதிலும், இந்த கொத்தடிமைத் தொழில்முறை இந்தியா முழுவதும் இன்னும் தொடர்கிறது. ஆனால், இது எந்தளவுக்குப் பரவி காணப்படுகிறது?

இந்தக் கேள்விக்கு யாரும் முறையாகப் பதில் சொல்வதற்கு, கொத்தடிமைத் தொழில் முறை பற்றி எவராலும் போதியளவு ஆய்வு செய்யப்படவில்லை. 1995-லிருந்து இந்தப் பிரச்சினை குறித்து மூன்று மதிப்பாய்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. முதல் ஆய்வு, 1995-ல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் நடத்தப்பட்டது மற்றும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று அதில் கண்டறியப்பட்டது. அடுத்த மதிப்பாய்வு 1997-ல் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு 25,005 கொத்தடிமைத் தொழிலாளர்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று தெரிவித்தது. இறுதியாக, 2015-ல் இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் மற்றும் நேஷனல் ஆதிவாசி சாலிடாரிட்டி கவுன்சில் ஆகிய அமைப்புகள் இணைந்து விரிவான ஒரு ஆய்வை நடத்தின.

தேசிய அளவில் அழுத்தம் பெற வேண்டிய பிரச்னை:

10 வகையான கொத்தடிமைத் தொழில் முறையில் 4.63 லட்சம் உடலுழைப்புத் தொழிலாளர்கள் உள்ளனர் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. இந்த ஒவ்வொரு ஆய்வுகளுக்கிடையே எண்ணிக்கையில் பெரும் வித்தியாசம் உள்ளது. இந்தக் குற்றத்தை எப்படி ஒழிப்பது, தடுப்பது என்பது குறித்து தகவலறிந்து மாநில அரசு முடிவுகள் எடுப்பதற்காக இன்னும் ஆழமான ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். 

கொத்தடிமைத் தொழில்முறை நிலவுவது மற்றும் அதில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு துல்லியமான தகவலையும், அறிவையும் கொண்டிருக்கும்போது, டீடுளுயு-வை பயனுகந்த வகையில் திறம்பட நடை முறைப்படுத்துவதற்கும் மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மனித கடத்தல் செய்பவர்களைப் பொறுப்பாக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசு திறனுள்ளவாறு தயார் நிலையில் இருக்கும். தங்களது சொந்த மாவட்டத்திற்கு வெளியே அதிக சதவீதத்தில் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக உள்ள நிலையில், இந்தியா முழுவதும் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே பாதுகாப்புடன் பணிக்காக மக்கள் இடம்பெயர்வதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆதரவு வழங்க வேண்டும். 

2005-ல் ஐடுழு ஒரு ஆய்வு நடத்தியது. தேசியளவில் அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டபோது மட்டுமே கொத்தடிமைததொழில்முறையை ஒழிப்பதற்கு உள்ளுர; அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று இந்த ஆய்வு தெரிவித்தது. சில அதிகாரிகள், கொத்தடிமைத்தொழில்முறை நடைமுறையில் இல்லை என்று கருதினர் அல்லது இந்த வகை வேலைக்காக மட்டுமே கொத்தடிமைத் தொழிலாளர்கள் பிறந்துள்ளனர் என்று நம்பி, கொத்தடிமை தொழில்முறை தங்கள் பகுதிகளில் இல்லவே இல்லை என்று மறுத்து வந்தனர். கொத்தடிமைத் தொழில்முறையை எதிர்த்துப்போராடுவதில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்தபோதிலும், இந்தப் பிரச்சினை குறித்து ஒரு நிலைப்பாடு எடுப்பதற்குப் பல அரசு அதிகாரிகள் இன்னும் விருப்பமில்லாமல் இருப்பதால், இது ஒரு கடினமான பாதையாகவே இருந்து வந்திருக்கிறது. 

கல ஆய்வு தேவை :

'கொத்தடிமைத் தொழில் முறை நிலவுகின்ற இடங்களில் நிகழ் நேரத்தில் ஆய்வுகள் செய்யப்படாத நிலையானது, இந்தப் பிரச்சினையின் உண்மையான வீச் செல்லையை இப்பிரச்சினை மீது அக்கறைப் பாங்கு கொண்டிருக்கிற அனைவரும் புரிந்துகொள்ளவும் மற்றும் பன்முகத்தன்மையோடு ஒருங்கிணைப்பு நிலவும் வழிமுறையில் அதை போதுமானளவு கையாண்டு தீர்வுகாண முடியாதவாறு தடங்கலாக இருந்து வந்திருக்கிறது” என்று குடிமை சமூக அமைப்புகளைச் சார்ந்த ஒரு பிரிவினர் கருதுகின்றனர். மிகவும் முழுமையான ஆராய்ச்சி மூலம், கொத்தடிமைத் தொழில்முறை எப்படி ஆரம்பிக்கிறது, அதன் அடிப்படை காரணங்கள் என்ன மற்றும் தொழிலாளர் மற்றும் குற்றம் புரிபவர் ஆகிய இரு தரப்பினர் மீதும் அதன் விளைவுகள் என்ன என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். நம்மிடமுள்ள புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, டீடுளுயு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது. இச்சட்டத்தை நடை முறைப் படுத்துவது அரசின் முன்னுரிமையாக மாற வேண்டும். 

ஆய்வுகள், புலன் விசாரணைகள், மீட்புப் பணி மற்றும் மறு வாழ்வுப்பணி மேற்கொள்வதற்குத் தேவையான மனிதவள மற்றும் நிதி சார்ந்த ஆதாரங்களை மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர்கள் அதிகளவில் இருப்பதாகத் தெரியக்கூடிய தொழில்களில் காவல் மற்றும் மாவட்ட அதிகாரிகள் ஒழுங்குமுறை தவறாமல் விசாரணைகள் நடத்த வேண்டும். ஒரு உகந்த, முழுமையான ஆய்வை மேற்கொள்வதற்கு நடப்பு மற்றும் முன்னாள் கொத்தடிமைத் தொழிலாளர்களை நேர்காணல்கள் செய்ய வேண்டும். அவர்கள் ஏன் கொத்தடிமைத் தொழிலாளர்களாக ஆனார்கள் என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்வதற்கு இது உதவும் மற்றும் இதே போன்ற சூழ்நிலைகளில் மற்றவர்கள் சிக்காமல் தடுப்பதற்கும் மற்றும் சமூகத்திற்கு இது குறித்து கற்பிப்பதற்குச் சிறந்த வழிகள் என்ன என்பதைக் கண்டறிவதற்கும் இது உதவும். 

இந்த மேம்பட்ட ஆய்வின் மூலம், கொத்தடிமைத் தோழில் முறை குற்றத்தை முடிவுக்குக்  கொண்டு வருவதற்குரிய அறிவாற்றலை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பெறும். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தவறாக முறையில் பயன்படுத்தி கொத்தடிமை முறையில் வேலை வாங்கும் குற்றவாளிகளிடமிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.

டாக்டர்.கிருஷ்ணன்
Secretary General of National Adivasi Solidarity Council (NASC)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com