இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகவும் பலவீனம்- ஐ.எம்.எஃப்.!

சர்வதேச நாணய நிதியம் என்பது 189 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அமைப்பாகும், இது உலகளாவிய நிதி ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்தை
இந்தியப் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட மிகவும் பலவீனம்- ஐ.எம்.எஃப்.!


சர்வதேச நாணய நிதியம் (The International Monetary Fund - IMF)

சர்வதேச நாணய நிதியம் என்பது 189 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு அமைப்பாகும், இது உலகளாவிய நிதி ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், உயர் வேலைவாய்ப்பு மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உலகெங்கிலும் உள்ள வறுமையைக் குறைப்பதற்கும் செயல்படுகிறது.

சர்வதேச நாணய நிதியம் முதலில் 1944 ல் பிரேடன் வூட்ஸ்  பரிமாற்ற ஒப்பந்தத்தின் [Bretton Woods Conference] ஒரு பகுதியாக அமைக்கப்பட்டது. பெரும் மந்த நிலையின் போது, நாடுகளே தங்கள் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்களை மேம்படுத்தும் முயற்சியில் வர்த்தகத்திற்குத் தடைகளை அதிகப்படுத்தின. இது தேசிய நாணயங்களின் பரிவர்த்தனை மற்றும் உலக வர்த்தகத்தில் சரிவுக்கு வழிவகுத்தது. 

சர்வதேச நாணய ஒத்துழைப்பின் இந்த முறிவு மேற்பார்வையின் தேவையை உருவாக்கியது. சர்வதேச அரசாங்க ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பை பற்றி விவாதிக்க அமெரிக்காவின் நியூ ஹெம்சிபியரிலுள்ள ப்ரெட்டன் வூட்ஸ் நகரத்தில் உள்ள மவுண்ட் வாஷிங்டன் ஹோட்டலில் 45 அரசாங்கங்களின் பிரதிநிதிகள் மாநாட்டில் ஐரோப்பாவை மீண்டும் எப்படி தட்டி எழுப்புவது பற்றி விவாதித்தனர்.

இந்திய பொருளாதாரத்தைப் பற்றி சர்வதேச நாணய நிதியம் கருத்து
உலக அளவில் அதிக மதிப்புகொண்ட பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. `உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனை சரிந்து வருகிறது; பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள்; முதலீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன; லாபம் சரிந்துள்ளது' என இந்தியாவின் பொருளாதார மந்த நிலை குறித்துப் பேசி வருகின்றனர் பொருளாதார நிபுணர்கள். இது 30 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி என்றும் தெரிவிக்கின்றனர்.

உலகத்தின் முக்கியமான பொருளாதார அமைப்புகள் எல்லாம், `இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?' என்று கணிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. அவற்றில் சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கியமானது. 2019 மற்றும் 2020-ல் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ள மதிப்பீடுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில், `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடவும் மிகவும் பலவீனமாக உள்ளது. வங்கிசாரா நிதி அமைப்புகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, பலவீனங்களுக்கான காரணங்களாகும்' எனக் கூறப்பட்டுள்ளது.

இதே ஐ.எம்.எஃப் ஜூலையில் வெளியிட்ட அறிக்கையில், `2019 மற்றும் 2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருக்கும்' எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், `தற்போது ஜிடிபி முறையே 7 மற்றும் 7.2 சதவிகிதமாக வளர்ந்தாலும், உள்நாட்டில் தேவை அதிகம் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட பொருளாதார வளர்ச்சி பலவீனமாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளது. எனினும், உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாகவும், சீனாவை விடவும் இந்தியா முன்னேறும் எனவும் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உலகளாவிய நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதிய (ஐ.எம்.எஃப்) செய்தி தொடர்பாளர்  ஜெர்ரி ரைஸ்  (Gerry Rice) கூறி உள்ளதாவது:-
இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது. முக்கியமாக பெருநிறுவன மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை மற்றும் சில வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நீடித்த பலவீனம் மற்றும் கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் ஆகியவை நாம் சொல்ல விரும்புவது போல எதிர்மறையாக  உள்ளன.

சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்கான மெதுவான வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு என்ன? எங்களிடம்  புதிய புள்ளி விவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது என கூறினார்.

அரசாங்கத்தின் தரவுகளின்படி, பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் ஏழு ஆண்டுகளில் குறைந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. ஒரு ஆண்டுக்கு முன் 8 சதவீதமாக இருந்தது.

உற்பத்தித் துறையில் கூர்மையான சரிவு மற்றும் விவசாய உற்பத்தியில்  பெரும்பாலும்  மந்தநிலை ஏற்பட்டது என புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் 2012-13 வரை 4.9 சதவீதமாக பதிவாகியுள்ளது. உலகளாவிய வர்த்தக உராய்வுகள் மற்றும் வணிக உணர்வைக் குறைக்கும் வகையில்  நுகர்வோர் தேவை மற்றும் தனியார் முதலீடு பலவீனமடைந்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம்  2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டத்தை 0.3 சதவீதம் குறைத்து 7 சதவீதமாக குறைத்துள்ளது. உள்நாட்டு தேவைக்கான "எதிர்பார்த்ததை விட பலவீனமான பார்வை" காரணமாக வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது முந்தைய அறிக்கையில் 7.5 சதவீத வளர்ச்சி விகிதமாக குறைந்து, நிதியாண்டில் 7.2 சதவீத புள்ளிகளாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com