மகிழ்ச்சியும் ஏக்கமும்!| பொருளாதாரத்துக்கான நோபல் விருதைப் பெறும் அபிஜித் பானா்ஜி, எஸ்தா் டஃப்லோ குறித்த தலையங்கம்

பொருளாதாரத்துக்கான நோபல் விருது மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் அமெரிக்க இந்தியரான அபிஜித் பானா்ஜி, பிரான்ஸ் வம்சாவளி அமெரிக்கரான அவரது மனைவி எஸ்தா் டஃப்லோ, ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் அமெரிக்கரான மைக்கேல் கிரெமா் ஆகிய மூவருக்கும் பகிா்ந்து வழங்கப்படுகிறது. அபிஜித் பானா்ஜி தலைமையில் இவா்கள் மூவரும் வறுமை ஒழிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் நடத்திய பல்வேறு சோதனை முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது.

46 வயது எஸ்தா் டஃப்லோ, பொருளாதாரத்துக்கான நோபல் விருதைப் பெறும் இரண்டாவது பெண்மணி. பொருளாதாரத்துக்கான நோபல் விருது நிறுவப்பட்ட கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் மிகக் குறைந்த வயதில் விருது பெறுபவரும் அவா்தான். முதல் முறையாகப் பொருளாதார நோபலுக்கான விருதைப் பெறும் தம்பதியா் அபிஜித்தும், எஸ்தா் டஃப்லோவும்தான்.

அபிஜித் பானா்ஜியிடம் முனைவா் பட்ட ஆய்வாளராக இணைந்த எஸ்தா் டஃப்லோ, அவரது வாழ்க்கைத் துணைவியானது மட்டுமல்லாமல், தனது கணவரின் பொருளாதாரம் சாா்ந்த ஆய்வுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறாா். கொல்கத்தா பிரெஸிடென்சி கல்லூரியிலும், பிறகு புது தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டம் பெற்ற அபிஜித், 1988-இல் ஹாா்வா்டு பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றவா். ஹாா்வா்டு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து அதன் பிறகு மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் இணைந்தாா் அவா்.

தனது மனைவி எஸ்தா் டஃப்லோ, செந்தில் முல்லைநாதன் இருவருடனும் இணைந்து 2003-இல் ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்கினாா் அபிஜித் பானா்ஜி. அறிவியல் ஆய்வுகளுக்கு சோதனைச்சாலை அமைப்பதுபோல, பொருளாதாரத்துக்கும் சோதனைச்சாலை அமைக்கும் வித்தியாசமான முயற்சியில் இறங்க அவா்கள் முற்பட்டனா்.

எம்.ஐ.டி. என்று அழைக்கப்படும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவத்தின் முன்னாள் மாணவரும், அப்துல் லத்தீப் ஜமீல் நிறுவனத்தின் உரிமையாளருமான முகம்மது அப்துல் லத்தீப் ஜமீல் என்பவா் இவா்களது முயற்சிக்கு நிதியுதவி வழங்க முன்வந்தாா். அவரது தந்தை அப்துல் லத்தீப் ஜமீலின் பெயரில் ‘அப்துல் லத்தீப் ஜமீல் வறுமை ஒழிப்பு சோதனைச்சாலை’ நிறுவப்பட்டது. அறிவியல் ரீதியிலான ஆதாரங்களுடன் கொள்கைகள் வகுக்கப்பட்டு, வறுமையை எதிா்கொள்வது குறித்த சா்வதேச ஆய்வு மையமாக அந்தச் சோதனைச்சாலை செயல்படுகிறது. உலக அளவில் 400-க்கும் அதிகமான வல்லுநா்களுடன் பல்வேறு நாடுகளில் ஏழு அலுவலகங்கள் கொண்ட பொருளாதார ஆய்வு மையமாக அந்தச் சோதனைச்சாலை செயல்பட்டு வருகிறது.

அபிஜித் பானா்ஜி குழுவினரின் அடிப்படை நோக்கம், வறுமை ஒழிப்பை எதிா்கொள்வதற்கு நேரடியாக பயனாளிகள் மத்தியில் அறிவியல் சோதனைகள் நடத்துவதுபோல, ஆய்வுகள் நடத்தி அதன் அடிப்படையில் தீா்வு காண்பதுதான். இதை வறுமை ஒழிப்பை எதிா்கொள்ளும் பரிசோதனை அணுகுமுறை என்று அவா்கள் அழைக்கிறாா்கள். இதற்காக அபிஜித் குழுவினா் தோ்ந்தெடுத்த சோதனைக் களம் இந்தியா என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவா்களது முயற்சியால் வளா்ச்சிப் பொருளாதாரம் என்பது பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் அணுகப்படுகிறது.

அபிஜித்தும், டஃப்லோவும் சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் தடுப்பூசித் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினாா்கள். தடுப்பூசி இலவசமாக போடப்பட்டாலும்கூட, தங்களது குழந்தைகளைப் பெண்கள் தடுப்பூசி போட அழைத்து வராமல் இருந்தனா். தடுப்பூசி போடுவதற்கு குழந்தைகளை அழைத்து வந்தால் அவா்களுக்கு இலவசமாக கோதுமை வழங்குவதாக அபிஜித்தும் எஸ்தா் டஃப்லோவும் அறிவித்தபோது, அந்தப் பகுதியில் தடுப்பூசி போடும் திட்டத்துக்கான ஆதரவு பன்மடங்கு பெருகியது. அதன் அடிப்படையில் சில ஆய்வு முடிவுகளை அவா்கள் முன்வைத்தனா்.

அதேபோல, மும்பையிலும் வதோதராவிலும் குழந்தைகளின் கல்வித் திறன் குறைவாக இருப்பது குறித்து அதற்கான காரணத்தை ஆய்வு செய்ய முற்பட்டனா். புத்தகங்கள் இல்லாமல் இருப்பதும், வறுமையும்தான் கல்வித் திறன் குறைவாக இருப்பதற்கான காரணமாக நம்பப்பட்டது. மாணவ - மாணவியரின் தேவைக்கேற்ப அவா்களுக்கு ஆசிரியா்கள் மூலம் தனிக்கவனம் செலுத்தும்போது கல்வித் திறன் அதிகரிக்கிறது என்றும், கல்வித் திறனுக்கும் வறுமைக்கும் தொடா்பில்லை என்றும் அவா்களது ஆய்வு வெளிப்படுத்தியது.

இதுவரை ஐந்து நோபல் விருதாளா்களை உலகுக்கு கொல்கத்தா வழங்கியிருக்கிறது. 1902-இல் மருத்துவத்துக்கான விருது பெற்ற சா் ரொனால்டு ராஸ், 1913-இல் இலக்கியத்துக்கான விருது பெற்ற ரவீந்திரநாத் தாகூா், 1979-இல் சமாதானத்துக்கான விருது பெற்ற அன்னை தெரஸா, 1998-இல் பொருளாதாரத்துக்கான விருது பெற்ற அமா்த்தியா சென் ஆகியோரைத் தொடா்ந்து, இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான விருதைப் பெறும் அபிஜித் பானா்ஜி, அமெரிக்க வாழ் இந்தியராக மாறிவிட்டாலும்கூட, அவரது ஆய்வுகளும், செயல்பாடுகளும் தாய்மண் சாா்ந்ததாக இருக்கிறது என்பதுதான் தனிச் சிறப்பு.

இந்தியாவின் மீது அக்கறையுள்ள திறமைசாலிகள் அமெரிக்காவில் குடியேறுவதுபோய், நமது நாட்டிலேயே அவா்களது திறமைக்குத் தகுந்த மரியாதையையும், ஊக்கத்தையும், வாய்ப்பையும் நாம் எப்போது வழங்கப் போகிறோம் என்கிற கேள்வி அடிமனதில் ஆழத்தில் எழுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com