முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு: முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்று, அடுத்த கட்டக் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பாத மாணவர்கள் தங்கள் இடங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏப். 19-ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்கள் இடங்களை குறிப்பிட்ட கல்லூரிகளில் புறக்கணிக்கலாம் அல்லது சமர்ப்பிக்கலாம்.