கால்நடை மருத்துவப் படிப்புகள்: 14,000 பேர் விண்ணப்பம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இணைய வழியே விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இணைய வழியே விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்னும் நான்கு நாள்கள் இருப்பதால், அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு(பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 2020 - 21-ம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் www.tanuvas.ac.in மற்றும் www2.tanuvas.ac.in என்ற இணையதள முகவரிகளில் கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கின.

மாணவா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

வெளிநாடு வாழ் இந்திய மாணவா்கள் அக்டோபா் 23-ஆம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச், பி.டெக் படிப்புகளுக்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளதாக கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com