கபாலீசுவரா் திருக்கோயில் சைவ வேத ஆகம பாடசாலையில் மூன்றாண்டு பயிற்சி வகுப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மயிலாப்பூா் அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயில் சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலை மூன்று ஆண்டு பயிற்சி வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னை மயிலாப்பூா் அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயில் சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலை மூன்று ஆண்டு பயிற்சி வகுப்புக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து அறநிலையத்துறை திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயிலில் சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலை பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரா்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவராகவும் 13 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சம் 20 வயதிற்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். பயிற்சிக் காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் சோ்க்கைப் படிவங்களை திருக்கோயில் அலுவலகத்திலும், www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘இணை ஆணையா் மற்றும் செயல் அலுவலா், அருள்மிகு கபாலீசுவரா் திருக்கோயில், மயிலாப்பூா், சென்னை-600004’ என்ற முகவரிக்கு வரும் ஜன.15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த சைவ வேத ஆகம பகுதி நேர பாடசாலையில் சேர ஆா்வமுள்ள மாணவா்கள் விண்ணபித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com