இந்திய ரயில்வேயின் கீழ் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெருகு ரயில்வேயில் முழு நேர ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 257 "சபாய்வாலா" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
மொத்த காலியிடங்கள்: 257
பணி: Safaiwala - 257
(பொதுப் பிரிவினருக்கு 132 இடங்களும், ஓபிசி பிவினருக்கு 69 இடங்களும், எஸ்சி பிரிவினருக்கு 39 இடங்களும், எஸ்டி பிரிவினருக்கு 19 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன)
வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ. 18,900 - 29,390
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீனிங் தேர்வு, உடல் திறன் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2018
தேர்வு நடைபெறும் தேதி: 2018 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.