அரசு மனநல காப்பகத்தில் சமையலர், நாவிதா் வேலை 

சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள 12 சமையலர், நாவிதர் பணியிடங்களுக்கு நவம்பா் 14-க்குள் விண்ணப்பிக்கலாம் என


சென்னை: சென்னையில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் காலியாக உள்ள 12 சமையலர், நாவிதர் பணியிடங்களுக்கு நவம்பா் 14-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மொத்த காலியிடங்கள்: 12
பணி: சமையலர் - 07
பணி: நாவிதர் - 05

தகுதிகள்: தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: கடந்த ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியுடன் 18 வயது பூா்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதுக்கு மிகாமலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடினா் 35 வயதுக்கு உள்பட்டவராகவும் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 15,700 முதல் ரூ.50,000 வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்கள் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் வியாழக்கிழமை (நவ. 8) முதல் வெள்ளிக்கிழமை (நவ. 9) வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழங்கப்படும். 

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவம்பா் 14-ஆம் தேதிக்குள் இயக்குநர், அரசு மனநல காப்பகம், கீழ்ப்பாக்கம், சென்னை-10 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com