நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் 31 செக்யூரிட்டி மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 31. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 17 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 8 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 4 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முப்படைகளில் ஏதாவதொன்றில் 5 ஆண்டு அதிகாரி பணிக்கான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 1.11.2018 தேதியின்படி நிலவரப்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். எனினும், குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ. 31,705 - 45,950 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் தகுதியின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் விவரங்கள் மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சலம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Manager Canara Bank Recruitment Cell, HR Wing Head Office, 12 JC Road, Bangalur 560002.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ. 708 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.118 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://canarabank.com/media/8358/rp-2-2018-manager-security-web-publ-english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 3.12.2018