தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள 133 சுற்றுச்சூழல் ஆய்வாளர், உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 133
பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 73
பணி: Environmental Scientist
காலியிடங்கள்: 60
சம்பளம்: மாதம் ரூ. 37,700 - 1,19,500
தகுதி: பொறியியல் துறையில், சிவில், கெமிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக், சூழ்நிலையியல் அறிவியல் துறையில் எம்.எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: 18 முதல் 38 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://tnpcb.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019