தென்னக ரயில்வேயின் கோவை, திருச்சி மற்றும் சென்னையில் காலியாக உள்ள 4429 பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசியாகும். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிடுயுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகதியானவர்கள்.
பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி
மொத்த காலியிடங்கள்: 4429
கோவை - 2652
திருச்சி - 853
சென்னை- 924
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இயற்பியல், வேதியியல், உயிரியியல் பாடங்களை கொண்ட பிரிவுகளில் பிளஸ் டூ முடித்தவர்கள் மருத்துவ ஆய்வக பயிற்சிக்கு (எம்எல்டி) விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். '
உதவித்தொகை: பயிற்சின்பொது முதல் ஆண்டும் மாதம் ரூ.5,700, இரண்டாம் ஆண்டும் மாதம் ரூ.6,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.7,350 உதவித்தொகையாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதில் இருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.sr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை எதிர்கால பயன்பாட்டிற்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.01.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Perambur.pdf, http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Ponmalai.pdf மற்றும் http://onlinedatafiles.s3.amazonaws.com/docs/Act_App_Podanur.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.