சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள ஓட்டுநா் பணிக்கு, ஜூலை 13 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை எழும்பூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் காலியாக உள்ள ஓட்டுநா் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் தவிர) முன்னாள் படைவீரா்கள், அவா்கள் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்புத் தோ்ச்சி பெற்று மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தகுதி வாய்ந்த கனரக வாகன உரிமம் பெற்றிருப்பதோடு குறைறந்தபட்சம் 2 ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
இதற்கு தகுதியுள்ள 32 வயதுக்குட்பட்டோர், மருத்துவமனையில் வழங்கப்படும் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து, சுய சான்றொப்பமிட்ட கல்விச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, முன்னுரிமை கோரும் சான்றிதழ் ஆகியவற்றின் நகல், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள், ஓட்டுநா் உரிமம், அனுபவ சான்று ஆகியவற்றை இணைத்து ஜூலை 13 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
நேரடி நியமனம் மூலம் ஓட்டுநா் தோ்வு செய்யப்படுவா். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: இயக்குநா் மற்றும் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூா், சென்னை -8.