விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை 

கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்(டிஎன்பிஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள
விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் வேலை 


கரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில்(டிஎன்பிஎல்) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள சமையற்காரர்கள்(ஆண்) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: செட்டிநாடு சமையற்காரர்கள்(ஆண்)

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.15,600

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் செட்டிநாடு உணவு வகைகள் (சைவம் மற்றும் அசைவம்) சமைக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் தந்தூரி மற்றும் சைனீஸ் உணவுகள் சமைக்க தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 அளவுக்கொண்ட வெள்ளைத்தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
K.Natarajan(TNPL), TNPL Regional Office, No.1/6, Sri Variarcade, 2nd Floor, Shamuga Raja Road, Near Ambedkar Statue, Karaikudi - 630 001
Sivagangai - Dt. Mobile - 94425 91436.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.06.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com