6491 காலியிடங்களுக்கான குரூப் 4 ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 6491 கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4 பணியிடங்களுக்கான 
6491 காலியிடங்களுக்கான குரூப் 4 ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு: டிஎன்பிஎஸ்சி


தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 6491 கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 6491

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1.Village Administrative Officer (VAO) - 397 
2.Junior Assistant (Non - Security) - 2688 
3. Junior Assistant (Security) - 104 
4. Bill Collector Grade-I - 34 
5. Field Surveyor - 509 
6. Draftsman - 74 
7. Typist - 1901
8. Steno-Typist (Grade–III) - 784

தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழக அரசால் நடத்தப்படும் தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்நிலை சான்று அல்லது இளநிலை சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது இரு மொழிகளில் ஏதாவதொன்றில் உயர்நிலை தட்டச்சு திறன் மற்றொன்றில் இளங்கலை தட்டச்சு திறன் சான்று பெற்றிருப்பவர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் உயர்நிலை அல்லது இரு மொழிகளில் ஏதாவதொன்றில் உயர்நிலை மற்றொன்றில் இளநிலை சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.  

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்ச தகுதியான பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு மேல் அதாவது பிளஸ் டூ, பட்டயம், பட்டம் போன்ற கூடுதல் கல்வித்தகுதிகள் பெற்றிருப்பின் அவர்களுக்கு உச்ச வயதுவரம்பு கிடையாது. 

தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பணி தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 01.09.2019

தேர்வு கட்டணம் மற்றும் பதிவு கட்டணம்: தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். முதன்முறையாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் பதிவு கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களை பற்றிய அடிப்படை விவரங்களை பதிவு செய்து டிஎன்எஸ்சி-யால் வழங்கப்படும் நிரந்தர பதிவு எண்ணை பெற்றுக்கொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in அல்லது tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_19_ccse4-notfn-eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com