நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி: ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ரெளலியில் நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள 2482 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு
நிலக்கரி நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி: ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

 
மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ரெளலியில் நார்தர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள 2482 தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 2482

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. வெல்டர் - 162
2. எலக்ட்ரீசியன் - 1260
3. பிட்டர் - 840
4. மோட்டார் மெக்கானிக் - 220

வயதுவரம்பு: 30.09.2018 தேதியின்படி 16 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மத்தியப் பிரதேசம் அல்லது உத்தரப்பிரதேசம் மாநில என்.சி.வி.டி., எஸ்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான பட்டியல் தயாரிக்கப்பட்டு அதனடிப்பையில் பயிற்சி இடங்கள் நிரப்பப்படும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nclcil.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com