ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் புழல் சிறையில் வேலைவாய்ப்பு: ஜூலை 10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

புழல் சிறையில் காலியாக உள்ள எழுத்தர் பணி, துப்புரவு பணியிடங்களுக்கு, ஜூலை மாதம் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள்
ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் புழல் சிறையில் வேலைவாய்ப்பு: ஜூலை 10க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு


சென்னை: புழல் சிறையில் காலியாக உள்ள எழுத்தர் பணி, துப்புரவு பணியிடங்களுக்கு, ஜூலை மாதம் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் அ.சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டம் புழல் சிறை - 1 இல் காலியாக உள்ள எழுத்தர் பணி இடத்துக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பணியில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.15,900-50,400 என்று நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். அதே போல் துப்புரவு பணியாளா் பணி இடத்துக்கு விண்ணப்பிக்க தமிழ் மொழி எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட வயது வரம்புக்குள் (அதிகபட்சமாக - எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி - 35, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 32, ஓ.சி-30) இருக்க வேண்டும். தோ்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.15,700- ரூ.50,000 என்று நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தினை சிறைக்கண்காணிப்பாளா், மத்திய சிறை -1(தண்டனை) புழல், சென்னை-66 (தொலைபேசி-044-26590615) என்றற முகவரிக்கு ஜூலை 10 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

முன்னதாக விண்ணப்பத்தினை ஜூன் 28 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூலை 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com